சிம்பு தனித்துவம் உடையவர் - யாருடனும் ஒப்பிட முடியாதவர்: சனா

மும்பை மாடலான சனா கான், சிம்புவின் சிலம்பாட்டம் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தவர். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவரான சனா இப்போது பரத்துடன் தம்பிக்கு இந்த ஊரு படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்.
இருவரில் யாரை உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்று கேட்டபோது, அப்படியெல்லாம் கேட்கப்படாது. சிம்பு தனித்துவம் கொண்டவர். அவரை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.
சிம்பு எனக்கு குரு. எனது முதல் படத்தின் நாயகனாக மட்டுமல்லாமல், தமிழ் சினிமா குறித்தும் நிறைய கற்றுக் கொடுத்தவர். அவரை யாருடனும் ஒப்பிட முடியாது.
அதேசமயம், பரத்தும் நல்ல நடிகர், அவருக்கும் தனி ஸ்டைல் உள்ளது. இருவருடனும் நடித்தது சந்தோஷமாக உள்ளது என்றார் சனா.
தம்பிக்கு இந்த ஊரு படத்தில் சனா ஒரு நாயகி. இன்னொரு நாயகியாக மதால்ஷாவும் இருக்கிறார். பக்கா கமர்ஷியலாக உருவாகியுள்ள இப்படம் தனக்கு பிரேக் தரும் என்ற நம்பிக்கையில் உள்ளாராம் சனா.


Click it and Unblock the Notifications











