Don't Miss!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காத்திருக்கும் சொர்ணமால்யா!
அலைபாயுதே மூலம் நடிப்புக் கடலில் காலெடுத்து வைத்த சொர்ணமால்யா முதல் படத்திலேயே நல்லா நடிக்கிறாரே என்று பெயர்வாங்கினார். தொடர்ந்து நடிப்பில் தீவிரமானார். இடையில் சிற்சில சர்ச்சைகள், சச்சரவுகள், ஒரு விவாகரத்து என வாழ்க்கைப் பயணம்.
இந்த நிலையில் மொழி படம் அவருக்கு நல்ல நடிகை என்ற பெயரை வாங்கித் தந்தது. ஜோதிகாவின் நடிப்போடு சொர்ணாவின் நடிப்பையும் அனைவரும் குறிப்பிட்டுப் பாராட்டினார்கள். இதனால் நெகட்டிவ் இம்பாக்ட் ஏற்பட்டு விட்டது.
சொர்ணமால்யாவுக்கு இப்படிப்பட்ட கேரக்டர்கள்தான் பொருத்தமாக இருக்கும் என நினைத்தவர்கள், அவரை நாடுவதையே விட்டு விட்டனராம்.
இனிமேல் நடித்தால் மொழி மாதிரி சத்தான படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் இருக்கிறாராம் சொர்ணமால்யா. மொழி படத்தில் தன்னை நிரூபித்து விட்டதால் அது மாதிரியான கேரக்டர்கள் தேடி வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவருக்கு அப்படி எதுவும் வராதது ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறாராம்.
இருந்தாலும் எப்படியும் வராமலா போய் விடும் என்ற நம்பிக்கையில் நடனத்தின் பக்கம் முழுக் கவனத்தையும் திருப்பி விட்டு விட்டாராம்.