Don't Miss!
- Lifestyle 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- News இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கல.. நெல்லையில் "லம்ப்"பாக வாரி இறைத்த "தலை".. பலன் கிடைக்குமா?
- Automobiles பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
காத்திருக்கும் சொர்ணமால்யா!
அலைபாயுதே மூலம் நடிப்புக் கடலில் காலெடுத்து வைத்த சொர்ணமால்யா முதல் படத்திலேயே நல்லா நடிக்கிறாரே என்று பெயர்வாங்கினார். தொடர்ந்து நடிப்பில் தீவிரமானார். இடையில் சிற்சில சர்ச்சைகள், சச்சரவுகள், ஒரு விவாகரத்து என வாழ்க்கைப் பயணம்.
இந்த நிலையில் மொழி படம் அவருக்கு நல்ல நடிகை என்ற பெயரை வாங்கித் தந்தது. ஜோதிகாவின் நடிப்போடு சொர்ணாவின் நடிப்பையும் அனைவரும் குறிப்பிட்டுப் பாராட்டினார்கள். இதனால் நெகட்டிவ் இம்பாக்ட் ஏற்பட்டு விட்டது.
சொர்ணமால்யாவுக்கு இப்படிப்பட்ட கேரக்டர்கள்தான் பொருத்தமாக இருக்கும் என நினைத்தவர்கள், அவரை நாடுவதையே விட்டு விட்டனராம்.
இனிமேல் நடித்தால் மொழி மாதிரி சத்தான படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் இருக்கிறாராம் சொர்ணமால்யா. மொழி படத்தில் தன்னை நிரூபித்து விட்டதால் அது மாதிரியான கேரக்டர்கள் தேடி வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவருக்கு அப்படி எதுவும் வராதது ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறாராம்.
இருந்தாலும் எப்படியும் வராமலா போய் விடும் என்ற நம்பிக்கையில் நடனத்தின் பக்கம் முழுக் கவனத்தையும் திருப்பி விட்டு விட்டாராம்.