Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காத்திருக்கும் சொர்ணமால்யா!
அலைபாயுதே மூலம் நடிப்புக் கடலில் காலெடுத்து வைத்த சொர்ணமால்யா முதல் படத்திலேயே நல்லா நடிக்கிறாரே என்று பெயர்வாங்கினார். தொடர்ந்து நடிப்பில் தீவிரமானார். இடையில் சிற்சில சர்ச்சைகள், சச்சரவுகள், ஒரு விவாகரத்து என வாழ்க்கைப் பயணம்.
இந்த நிலையில் மொழி படம் அவருக்கு நல்ல நடிகை என்ற பெயரை வாங்கித் தந்தது. ஜோதிகாவின் நடிப்போடு சொர்ணாவின் நடிப்பையும் அனைவரும் குறிப்பிட்டுப் பாராட்டினார்கள். இதனால் நெகட்டிவ் இம்பாக்ட் ஏற்பட்டு விட்டது.
சொர்ணமால்யாவுக்கு இப்படிப்பட்ட கேரக்டர்கள்தான் பொருத்தமாக இருக்கும் என நினைத்தவர்கள், அவரை நாடுவதையே விட்டு விட்டனராம்.
இனிமேல் நடித்தால் மொழி மாதிரி சத்தான படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் இருக்கிறாராம் சொர்ணமால்யா. மொழி படத்தில் தன்னை நிரூபித்து விட்டதால் அது மாதிரியான கேரக்டர்கள் தேடி வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவருக்கு அப்படி எதுவும் வராதது ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறாராம்.
இருந்தாலும் எப்படியும் வராமலா போய் விடும் என்ற நம்பிக்கையில் நடனத்தின் பக்கம் முழுக் கவனத்தையும் திருப்பி விட்டு விட்டாராம்.