Don't Miss!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தொகுக்கப் போய் விட்ட சாயா சிங்
அழகான நடிகைகளில் சாயா சிங்கும் ஒருவர். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதைத் திருடிய இவர் சினிமாவில் பெரிய இடத்துக்கு வருவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ராசியோ என்னவோ ஸ்டார் நடிகையாக மாறத் தவறினார் சாயா.
சிற்சில படங்களில் நடித்த அவர் குத்துப் பாட்டிலும் தலையைக் காட்டிப் பார்த்தார். பலன் தரவில்லை. சமீபத்தில் வெளியான ஆனந்தபுரத்து வீடு படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹீரோயினாக நடித்துள்ளார் சாயா. படத்திற்கு நல்ல மாதிரியான வரவேற்பு கிடைத்து வருவதால் குஷியாகியுள்ளார் சாயா.
இருப்பினும் ஜூம் டிவியில் தொகுப்பாளினியாக அவர் புக் ஆகியுள்ளார். ஜூம் டிவி ஒரு வங்காளப் படம் தயாரித்தது. அதில் நடித்தார் சாயா சிங். அப்போது ஏற்பட்ட நட்பில் தொகுப்பாளினியாக சாயா சிங்கை வளைத்துப் போட்டு விட்டனராம்.
இருப்பினும் தொடர்ந்து சினிமாவிலும் நடிப்பாராம் சாயா. இதற்காக தமிழ்ப் இயக்குநர்கள் சிலரிடம் கதையும் கேட்டு வைத்துள்ளாராம். தனக்குப் பொருத்தமான கதையைத்தேர்வு செய்து நடிக்கப் போவதாக கூறியுள்ளார் சாயா.