Don't Miss!
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
'ஆளை விடுங்க...' - மும்பை கிளம்பிய அசின்!
போகிற இடமெல்லாம் கறுப்புக் கொடி, ஆர்ப்பாட்டம், படத்துக்கு செருப்படி என தமிழ் உணர்வாளர்கள் காட்டிய கடும் எதிர்ப்பில் அரண்டு போய்விட்டார் இலங்கை புகழ் அசின்.
இதனால் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு படப்பிடிப்பை ஷிப்ட் பண்ண வேண்டிய நிலைக்கு ஆளானார். ஆனால் அங்கும் போராட்டக்காரர்கள் வருவதாக சொல்லப்பட 'எப்போது முடியும் இந்தப் படம்.... எப்போது மும்பைக்குப் பறக்கலாம்' எனக் காத்திருந்தாராம் அசின்.
ஒருவழியாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் காவலன் படப்பிடிப்பு முடிந்தது. இதையொட்டி பூசணிக்காய் உடைக்கப்பட்டது.
பின்னர் விஜய், இயக்குநர் சித்திக் உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவினரிடம் விடைபெற்றுக் கொண்டு ஹோட்டலுக்குப் புறப்பட்டார் அசின்.
"வாழ்க்கையில் என்னால் மறக்கமுடியாது படப்பிடிப்பென்றால் அது காவலன்தான். சந்தோஷம், பதட்டம், பயம் எல்லாமே கலந்த ஷூட்டிங் இதுதான். ஒரு கட்டத்தில் சீக்கிரம் இந்த படப்பிடிப்பு முடிந்துவிட்டால் போதும் என்றாகிவிட்டது. ஆனால் விஜய்யும் சித்திக்கும் என்னைப் பார்த்துக் கொண்ட விதம், எனக்கு ஆதரவளித்த விதம் மறக்க முடியாதது..," என்றார்.
இன்னும் ஓரிரு தினங்களில் படத்துக்கான டப்பிங்கையும் தானே பேசும் அசின், அது முடிந்த கையோடு மும்பைக்குப் புறப்படுகிறார்.