Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
'அங்காடித் தெரு' அஞ்சலி
தெலுங்குப் பெண்ணான அஞ்சலி, நடித்த முதல் படம் கற்றது தமிழ். இந்தப் படத்தின் மூலம் அவரும் நன்றாகவே தமிழ் கற்றுக் கொண்டு விட்டார். இப்போது அடுத்த படத்திற்கும் தயாராகி விட்டார்.
வசந்தபாலன் இயக்கும் 2வது படம்தான் அங்காடித் தெரு. அதில்தான் அஞ்சலி நாயகியாக நடிக்கவுள்ளார்.
முதல் படமான வெயில் வித்தியாசமான கதை. வாழ்க்கையில் தோற்ற ஒருவனின் கதையை அதில் சொல்லியிருந்தார் வசந்தபாலன். இந்த முறை, அடித்தட்டு மக்களின் நிலையை தனது கதைக் களமாக கையில் எடுத்துள்ளார் வசந்தபாலன்.
இதுவரை இந்த மக்களின் வாழ்க்கையை சினிமாக்காரர்கள் சரிவர திரும்பிப் பார்க்கவில்லை. படங்களும் அதிக அளவில் வந்ததில்லை. எனவேதான் இந்த மக்களின் கதையை விலாவாரியாக சொல்லப் போகிறேன். அதுதான் அங்காடித் தெரு என்கிறார் வசந்தபாலன்.
இப்படத்தின் நயாகனாக திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் நடிக்கிறார். இவர் ஒரு வாலிபால் வீரராம். மிகக் கடுமையாக தேடிப் பிடித்து மகேஷை நாயகனாக்கியுள்ளனர்.
ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். வழக்கம் போல ஜி.வி.பிரகாஷ்குமாரே இப்படத்திலும் இசையமைக்கிறார்.
எனது பாணி எதார்த்த படமாக அங்காடித் தெரு இருக்கும் என்று கூறுகிறார் வசந்தபாலன்.