Don't Miss!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- News தாய் மடிக்கே திரும்பியதை போல ஃபீல் ஆகுது.. பாஜகவில் இணைந்த சுரங்க மன்னன் ஜனார்த்தன ரெட்டி நெகிழ்ச்சி
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'அங்காடித் தெரு' அஞ்சலி
தெலுங்குப் பெண்ணான அஞ்சலி, நடித்த முதல் படம் கற்றது தமிழ். இந்தப் படத்தின் மூலம் அவரும் நன்றாகவே தமிழ் கற்றுக் கொண்டு விட்டார். இப்போது அடுத்த படத்திற்கும் தயாராகி விட்டார்.
வசந்தபாலன் இயக்கும் 2வது படம்தான் அங்காடித் தெரு. அதில்தான் அஞ்சலி நாயகியாக நடிக்கவுள்ளார்.
முதல் படமான வெயில் வித்தியாசமான கதை. வாழ்க்கையில் தோற்ற ஒருவனின் கதையை அதில் சொல்லியிருந்தார் வசந்தபாலன். இந்த முறை, அடித்தட்டு மக்களின் நிலையை தனது கதைக் களமாக கையில் எடுத்துள்ளார் வசந்தபாலன்.
இதுவரை இந்த மக்களின் வாழ்க்கையை சினிமாக்காரர்கள் சரிவர திரும்பிப் பார்க்கவில்லை. படங்களும் அதிக அளவில் வந்ததில்லை. எனவேதான் இந்த மக்களின் கதையை விலாவாரியாக சொல்லப் போகிறேன். அதுதான் அங்காடித் தெரு என்கிறார் வசந்தபாலன்.
இப்படத்தின் நயாகனாக திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் நடிக்கிறார். இவர் ஒரு வாலிபால் வீரராம். மிகக் கடுமையாக தேடிப் பிடித்து மகேஷை நாயகனாக்கியுள்ளனர்.
ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். வழக்கம் போல ஜி.வி.பிரகாஷ்குமாரே இப்படத்திலும் இசையமைக்கிறார்.
எனது பாணி எதார்த்த படமாக அங்காடித் தெரு இருக்கும் என்று கூறுகிறார் வசந்தபாலன்.