ஐஸ்லாந்தில் நயனதாரா!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வருகிறது ஆதவன். ரெட் ஜயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யா, நயனதாரா இணைந்து நடிக்கின்றனர்.
கஜினிக்குப் பின்னர் நயனதாராவுடன், சூர்யா இணைவது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பாடலுக்காக ஐஸ்லாந்து போய் திரும்பியுள்ளது ஆதவன் படக்குழு. ஐஸ்லாந்தில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் என்ற பெருமையும் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது.
காரணம், இதுவரை எந்தத் தமிழ்ப் படக் குழுவும் ஐஸ்லாந்துக்குப் போனதே இல்லையாம்.
தாமரை எழுதிய ஏனோ ஏனோ பனித்துளி என்று தொடங்கும் அந்தப் பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலுக்கு ஆடிப் பாடத்தான் சூர்யா, நயனதாரா ஐஸ்லாந்து போனார்களாம்.
இன்னொரு பாடலை டார்ஜிலிங்கில் வைத்து ஷூட் செய்தனராம்.
Comments
aadavan ஆதவன் கேஎஸ்ரவிக்குமார் சினிமா சூர்யா தமிழ் நடனம் நயனதாரா பாடல் cinema dance ksravikumar nayanthara song surya


Click it and Unblock the Notifications