Don't Miss!
- Lifestyle 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- Sports என்னங்க இது.. அநியாயத்துக்கு பேட்டிங் ஆர்டரை மாற்றும் டெல்லி கேபிடல்ஸ்.. புலம்பும் ரசிகர்கள்
- News மோடியின் முஸ்லிம் பேச்சு.. விமர்சித்த பாஜக சிறுபான்மை அணித் தலைவர் கட்சியிலிருந்து டிஸ்மிஸ்
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அய்யோ பாவம் பத்மப்ரியா!
மிருகம் படத்தில் ஏற்பட்ட சலசலப்பு, இயக்குநர் சாமி கொடுத்த பளார், அதைத் தொடர்ந்து நடந்த வெளிநடப்பு என சில காலத்திற்கு முன்பு பெரும் சர்ச்சையில் சிக்கினார் பத்மப்பிரியா.
மதுரை பக்கம் நடந்த இந்த குழப்பத்திற்குப் பின்னர் சென்னைக்குத் திரும்பிய பத்மப்ரியா நடிகர் சங்கம், தயாரிப்பாளர் கவுன்சிலில் சாமி மீது புகார் செய்ய, தயாரிப்பாளர் கவுன்சில் சாமிக்கு ரெட் கார்டு போட்டு விட்டது.
ஒரு வருடத் தடை என்ற தயாரிப்பாளர் கவுன்சிலின் தடை சாமியை ஒன்றும் செய்யவில்லை. அவர் படு ஹாயாக தனது அடுத்த படத்திற்கான அச்சாரத்தைப் போட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆனால் பத்மப்ரியா நிலைதான் மோசமாகியுள்ளது. மிருகம் படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து பலரும் பாராட்டியதால், கில்ட்டி ஆகி விட்டதாம் பத்மப்ரியாவுக்கு. தனது கோபத்தை மறந்து விட்டு சாமிக்கு தொலைபேசியில் பாராட்டு தெரிவித்தாராம்.
இந்த நிலையில் பத்மப்ரியாவுக்கு இப்போது கையில் படம் எதுவும் இல்லாத நிலை. புக் ஆன அர்ஜூன் படத்திலிருந்தும் தூக்கி விட்டனர்.
இப்போது தமிழில் சுத்தமாக படம் இல்லாத நிலையில் இருக்கும் பத்மப்ரியாவுக்கு மலையாளத்திலும் கூட திருப்தியான வாய்ப்புகள் இல்லையாம்.
மிருகம் பட சர்ச்சையைத் தொடர்ந்து அவரை புக் செய்ய இயக்குநர்கள் மத்தியிலும் பெரிய அளவில் ஆர்வம் இல்லையாம். இதனால் கிட்டத்தட்ட சுவற்றில் அடித்த பந்து நிலைமையில் உள்ளாராம் பத்மப்ரியா.
என்ன பண்ணலாம்? பத்மப்ரியாவோடு சேர்ந்து நாமளும் யோசிப்போம்!