Don't Miss!
- Sports 89 ரன்களில் குஜராத் ஆல் அவுட்.. 8.5வது ஓவரில் எல்லாம் போட்டியை முடித்த டெல்லி.. எகிறிய ரன் ரேட்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Automobiles ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
- Lifestyle உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- News ‛ஏசி ஹெல்மெட்’ வந்தாச்சி.. இனி கோடையிலும் ஜில்லுனு இருக்கலாம்.. வெயிலை சமாளிக்க சூப்பர் ஐடியா.. செம
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நவ்யா நாயருக்கு ஜனவரியில் கல்யாணம்
தமிழில் அழகிய தீயே படத்தில் அறிமுகமானவர் நவ்யா நாயர். கேரளாவைச் சேர்ந்தவர். தமிழிலும் மலையாளத்திலும் பல படங்களில் நடித்தவருக்கு, இப்போது தமிழில் கைவசம் பெரிதாக வாய்ப்புகள் இல்லை.
தற்போது மம்முட்டியுடன் துரோணா என்ற படத்திலும், சுரேஷ் கோபியுடன் சத்கமயா படத்திலும் மட்டும் நடித்து வருகிறார்.
எனவே இவருக்கு திருமணம் செய்து வைக்க அவருடைய தந்தை ராஜுவும், தாய் வீணாவும் முடிவு செய்து தீவிரமாக மாப்பிள்ளை தேடி வந்தனர்.
கேரள மாநிலம் சங்கனாச்சேரி மாடையில் குடும்பத்தை சேர்ந்த நாராயண மேனன் மகன் சந்தோஷ் மேனனை நவ்யாவின் பெற்றோருக்குப் பிடித்துவிட்டது. சந்தோஷ் மேனன் மும்பையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் மார்க்கெட்டிங் பிரிவு துணைத் தலைவராக பணியாற்றுகிறார்.
இருவருடைய ஜாதக பொருத்தமும் சரியாக இருந்ததால், நவ்யா நாயர்- சந்தோஷ் மேனன் இருவரும் நேரில் சந்தித்துப் பேசினர். இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துப் போனதால், அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.
வருகிற ஜனவரி மாதம் இந்தத் திருமணம் நடக்கும் என நவ்யாவின் தந்தை தெரிவித்துள்ளார்.