Don't Miss!
- News அத்தை ராதிகா பாஜக வேட்பாளர்.. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம்
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கிழக்கு கடற்கரை சாலையில் அக்ஷயாவை துரத்திய கும்பல்
கலாபக் காதலன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அக்ஷயாவுக்கு சொந்த ஊர் ஆந்திரா. கவர்ச்சியில் பின்னி எடுத்து வரும் இவருக்கு முதல்வர் கருணாநிதியின் கதை-வசனத்தில் உருவாகி வரும் உளியின் ஓசை படத்தில் நல்ல ரோல் தரப்பட்டுள்ளது.
இதன் படப்பிடிப்பு மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. கிளைமேக்ஸ் காட்சியை நேற்று முன் தினம் படமாக்கினர். இதனால் சூட்டிங் நள்ளிரவு வரை நீ்ண்டுவிட்டது.
ஒரு வழியாக பேக்-அக் ஆகி நள்ளிரவு 2 மணியளவில் காரில் தனது தாயார், உதவியாளர், மேக்அப் மேன் ஆகியோருடன் சென்னையில் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குப் புறப்பட்டார் அக்ஷயா.
கிழக்குக் கடற்கரைச் சாலையில் கார் சென்றபோது 7 பேர் கொண்ட கும்பல் மோட்டார் பைக்குளில் விரட்ட ஆரம்பித்துள்ளது. காரை முந்திச் சென்ற நிறுத்த முயன்ற அந்த கும்பல், காரின் கண்ணாடிகளில் அடித்துள்ளது.
மிரண்டு போன அக்ஷயா காரை நிறுத்தாமல் ஓட்டச் சொல்லியிருக்கிறார். இதையடுத்து டிரைவர் காரை படு வேகத்தில் ஓட்டி கோவளம் செக் போஸ்டில் போய் நிறுத்தியுள்ளார்.
இதையடுத்து அந்த பைக் கும்பல் திரும்பிச் சென்றுள்ளது.
காரை விட்டிறங்கி தனக்கு நேர்ந்ததை அக்ஷயா போலீசாரிடம் கூறவே அவர்கள் ஜீப்பில் அந்தக் கும்பலைத் தேடிப் புறப்பட்டதோடு அக்ஷயாவை பாதுகாப்புடன் ஹோட்டலுக்கு அனுப்பி வைத்தனர்.
கிழக்குக் கடற்கரைச் சாலையில் மிக மோசமான சமூக விரோத கும்பல்கள் இரவு-பகல் என எந்த நேரமும் சுற்றித் திரிவது குறிப்பிடத்தக்கது. பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடக்கும் முன் போலீசார் விழித்துக் கொள்வது சென்னைவாசிகளுக்கு நல்லது.
முதல்வரின் கதை-வசனத்தில் தயாராகும் ஒரு படத்தில் நடிக்கும் ஒரு நடிகைக்கே இந்த நிலை என்றால் சாமானியர்கள்...