Don't Miss!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Automobiles எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இயக்குநர் சொல்வதைத் தட்டாமல் கேட்பேன்-அர்ச்சனா கவி
தடுக்கி விழுந்தால் பாலக்காடு, தெரியாமல் இடித்தால் திருவல்லா என்ற ரேஞ்சுக்கு தமிழ் சினிமா போய்க் கொண்டிருக்கிறது. யாரைப் பார்த்தாலும் மலையாள நடிகைகளாகவே இருக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது புதிதாக ஒரு நட்சத்திரம் கேரளாவிலிருந்து தமிழுக்கு வந்துள்ளார். அவர் அர்ச்சனா கவி.
மலையாளத்தில் வெளியான நீலத்தாமரை படத்தில் நடித்து அறிமுகமானவர் அர்ச்சனா. பின்னர் மம்மியும், ஞானும் என்ற படத்தில் ஊர்வசியின் மகளாக நடித்து பெயர் வாங்கினார்.
இவருக்குச் சொந்த ஊர் கண்ணனூர். அரவான் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார்.
பொண்ணு கேரளாவாக இருந்தாலும், டெல்லியில் வளர்ந்தவராம். இதனால் மலையாளம் தவிர இந்தியும் நன்றாக தெரிகிறது. கவர்ச்சியாக நடிப்பீர்களா என்ற பாரம்பரியமான கேள்வியை அவரிடம் கேட்டால், இதையே ஏன் திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள் என்று புரியவில்லை. ஒரு நடிகை என்று வந்து விட்டால் இயக்குநர் சொல்படி நடிக்க வேண்டும். காட்சிக்கேறப நடித்தால்தான் சரியாக இருக்கும்.
கவர்ச்சிகரமாக நடிப்பதும் கூட நடிப்பில் ஒரு அங்கம்தான். பிறகு அப்படி நடிக்க மாட்டேன் என்று கூறினால் எப்படி என்கிறார் படு இயல்பாக.
தமன்னாக்களே கொஞ்சம் உஷாரவே இருந்துக்கோங்க!