Don't Miss!
- News 21 தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் உத்தேச பட்டியல்.. இன்று வெளியாகும் அறிவிப்பு?
- Lifestyle இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Finance வீட்டுக்கு ஏசி வாங்க போறிங்களா? ரூ.30,000க்கு கீழ் கிடைக்கும் பிராண்டட் AC-களின் பட்டியல் இதோ!..
- Automobiles பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
நடிகை பாரதி ஆள் வைத்து தாக்கியதாக மேனேஜர் புகார்
அம்முவாகிய நான் பட நாயகி பாரதியும், அவரது அடியாட்களும் தன்னை சரமாரியாக அடித்து உதைத்ததாக அவரது மேனேஜர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
அம்முவாகிய நான் படம் மூலம் ஹீரோயின் ஆனவர் பாரதி. பின்னர் நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்திலும் நடித்தார். தற்போது சற்று முன் கிடைத்த தகவல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில், பாரதிக்கும், அவரது மேனேஜர் தணிகைவேலுக்கும் திருமணமானதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் பாரதியிடம் மேனேஜராக இருந்து வரும் வேல்ராஜா என்பவர், தன்னை பாரதியும், அவரது அடியாட்களும், மேனேஜர் தணிகவேலும் சேர்ந்து அடித்து உதைத்ததாக வளசரவாக்கம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து வேல்ராஜா கொடுத்துள்ள புகாரில், நான் பாரதியிடம் மேனேஜராக இருந்து வருகிறேன். சில மாதங்களுக்கு முன்பு தணிகைவேல் எனக்கு அறிமுகமானார்.
எனது திருமணத்துக்காக தணிகைவேல் ரூ. 75 ஆயிரம் கடன் கொடுத்தார். கல்யாணத்தின்போது தணிகைவேல் வந்திருந்தார். அப்போது அவரை, பாரதியிடம் அறிமுகப்படுத்தி வைத்தேன்.
அதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இந்தத் தகவலை நான்தான் பரப்பினேன் என்று பாரதியும், தணிகைவேலும் சந்தேகப்பட்டனர்.
இந்த நிலையில் பாரதி வீட்டுக்கு என்னை ஒருவர் அழைத்துச் சென்றார். அங்கு பாரதியும், அவருடன் இருந்த அடியாட்களும், இரும்புக் கம்பியால் கடுமையாக தாக்கினர். பாரதியும் தாக்கினார். அப்போது தணிகைவேலும் அங்குதான் இருந்தார்.
நள்ளிரவு 12 மணிக்கு என்னை இறக்கி விட்டுப் போய் விட்டனர். நான் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று திரும்பியுள்ளேன்.
என்னைக் கொன்று விடுவதாக மிரட்டுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் வேல்ராஜா.
இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.