Don't Miss!
- News மோடியின் முஸ்லிம் பேச்சு.. விமர்சித்த பாஜக சிறுபான்மை அணித் தலைவர் கட்சியிலிருந்து டிஸ்மிஸ்
- Lifestyle கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Sports ரோஹித்துக்கு விசுவாசமாக இருந்த வீரரை அணியை விட்டே நீக்கிய ஹர்திக் பாண்டியா? கதறும் ரசிகர்கள்
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகை பாரதி ஆள் வைத்து தாக்கியதாக மேனேஜர் புகார்
அம்முவாகிய நான் பட நாயகி பாரதியும், அவரது அடியாட்களும் தன்னை சரமாரியாக அடித்து உதைத்ததாக அவரது மேனேஜர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
அம்முவாகிய நான் படம் மூலம் ஹீரோயின் ஆனவர் பாரதி. பின்னர் நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்திலும் நடித்தார். தற்போது சற்று முன் கிடைத்த தகவல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில், பாரதிக்கும், அவரது மேனேஜர் தணிகைவேலுக்கும் திருமணமானதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் பாரதியிடம் மேனேஜராக இருந்து வரும் வேல்ராஜா என்பவர், தன்னை பாரதியும், அவரது அடியாட்களும், மேனேஜர் தணிகவேலும் சேர்ந்து அடித்து உதைத்ததாக வளசரவாக்கம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து வேல்ராஜா கொடுத்துள்ள புகாரில், நான் பாரதியிடம் மேனேஜராக இருந்து வருகிறேன். சில மாதங்களுக்கு முன்பு தணிகைவேல் எனக்கு அறிமுகமானார்.
எனது திருமணத்துக்காக தணிகைவேல் ரூ. 75 ஆயிரம் கடன் கொடுத்தார். கல்யாணத்தின்போது தணிகைவேல் வந்திருந்தார். அப்போது அவரை, பாரதியிடம் அறிமுகப்படுத்தி வைத்தேன்.
அதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இந்தத் தகவலை நான்தான் பரப்பினேன் என்று பாரதியும், தணிகைவேலும் சந்தேகப்பட்டனர்.
இந்த நிலையில் பாரதி வீட்டுக்கு என்னை ஒருவர் அழைத்துச் சென்றார். அங்கு பாரதியும், அவருடன் இருந்த அடியாட்களும், இரும்புக் கம்பியால் கடுமையாக தாக்கினர். பாரதியும் தாக்கினார். அப்போது தணிகைவேலும் அங்குதான் இருந்தார்.
நள்ளிரவு 12 மணிக்கு என்னை இறக்கி விட்டுப் போய் விட்டனர். நான் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று திரும்பியுள்ளேன்.
என்னைக் கொன்று விடுவதாக மிரட்டுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் வேல்ராஜா.
இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!