Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பாலிவுட் படங்களில் நடிக்க துடிக்கவில்லை-லேகா வாஷிங்டன்
டிவியில் காம்பியராக இருந்து நடிகையானவர் லேகா. தமிழில் சிம்புவுடன் கெட்டவன் படத்தில் நடிப்பதாக இருந்தது. பின்னர் லேகாவை கைவிட்டுவிட்டார் சிம்பு.
இதையடுத்து ஜெயம்கொண்டான் படத்தில் நடித்தார் லேகா. தற்போது இந்தியிலும் நுழைந்துள்ளார். லேகா நடித்துள்ள இந்திப் படமான பீட்டர் காயா காம் சே படத்தில் கவர்ச்சியில் பின்னி எடுத்துள்ளாராம். அதேபோல தெலுங்கிலும் ஒரு படத்தை முடித்துள்ளார்.
இனி இந்தியில்தான் லேகா தீவிர கவனம் செலுத்தப் போவதாக கூறப்படுகிறது. ஆனால் அதை மறுக்கிறார் லேகா. இதுகுறித்து அவர் கூறுகையில், வாய்ப்புகள் தானாக வந்தன. எனது முதல் இந்திப் படம் குறித்து பெருமிதமாக உள்ளது.
பீட்டர் காயா காம் சே முழுக்க முழுக்க நகைச்சுவைப் படம். வயிறு வலிக்க சிரிக்கலாம். அதேபோல கன்னடத்திலும் ஒரு படத்தை முடித்துள்ளேன். அதில் லோகேஷுடன் இணைந்து நடித்துள்ளேன். இது அருமையான லவ் ஸ்டோரி.
தென்னிந்தியத் திரையுலகம் மிகப் பெரியது.நிறையப் படங்கள் இங்குதான் தயாரிக்கப்படுகின்றன. எனவே பாலிவுட்டில் தீவிரமாக நடிக்க நான் அவசரப்படவில்லை. துடிக்கவில்லை. மாறாக நல்ல வாய்ப்புகள் வந்தால் நிச்சயம் நடிப்பேன்.
எனக்கு மொழி ஒரு பிரச்சினை இல்லை. அனைத்துப் படங்களிலும் நடிக்கவே ஆர்வமாக உள்லளேன் என்கிறார் லேகா.
மும்பைப் பெண்ணான லேகா படிப்புக்காக சென்னைக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மீண்டும் மும்பைக்கே அவர் இடம் பெயருகிறார்.
அகமதாபாத்தில் எனது பிஜி டிகிரியை முடித்தவுடன் நான் கற்சிலைகளை வடிப்பதில் இறங்கி விட்டேன். பின்னர் இயக்குநராவதற்கான படிப்பை முடித்தேன். ஆனால் இப்போது நடிகையாகி விட்டேன் என்கிறார் சிரித்தபடி.