Don't Miss!
- News வேலி தாண்டிய வெள்ளாடு.. கோவை லாட்ஜ் டூ திருச்சி லாட்ஜ்.. வெறும் 14 வயசு தான்.. என்ன கொடுமை இதெல்லாம்
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஐஸ்வர்யா ராய்க்கு வளைகாப்பு... பாலிவுட் நடிகைகள் பங்கேற்பு!
எட்டு மாத கர்ப்பிணியான ஐஸ்வர்யா ராய் வளைகாப்புக்காக அமிதாப்பச்சனின் இல்லம் இன்று வண்ணமயமாக ஜொலிக்கிறது. ஐஸ்வர்யா ராயின் மாமியார் ஜெயா பச்சன் இந்த விழாவை நடத்துகிறார். மும்பை கலாச்சாரப்படி இந்த விழா நடக்கிறது.
ஐஸ்வர்யா ராய் நவம்பரில் குழந்தை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஐஸ்வர்யா கணவர் அபிஷேக் கூறுகையில், "குழந்தை பிறக்கும் தேதி இன்னும் எங்களுக்கு கூறப்படவில்லை. எனினும் அது நவம்பர் மாத குழந்தையாக இருக்கும்.
இந்தக் குழந்தை மூலம் எங்கள் குடும்பத்தில் நவம்பர் மாதத்தில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 6-ஆக உயரப் போகிறது," என்ரார். குழந்தை பிறக்கும்போது ஐஸ்வர்யாவுடன் இருக்க விரும்புகிறேன் என்றும் அவர் கூறினார்.
மேலும் ஐஸ்வர்யாவுக்கு இரட்டைக் குழந்தைகள் என வெளியான செய்திகளை மறுத்தார் அபிஷேக்.
2007-ல் அபி - ஐஸ் திருமணம் விமரிசையாக நடந்தது. நான்கு ஆண்டுகள் கழித்து இவர்களுக்கு முதல் குழந்தை பிறக்கிறது!
இன்று நடக்கும் சீமந்த விழாவில் பாலிவுட் நடிகைகள் கஜோல், ஷாரூக்கான் மனைவி கௌரி கான் உள்பட பலரும் பங்கேற்கின்றனர்.