twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்வைன் பீதி-மமதா ரெஸ்ட்!

    By Staff
    |

    Mamatha
    நடிகை மமதா மோகன்தாஸுக்கு கடும் காய்ச்சலாம். பன்றிக் காய்ச்சலாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் ஒரு மாதத்திற்கு படப்பிடிப்புகளை கேன்சல் செய்து விட்டு வீட்டில் ஓய்வெடுத்து வருகிறாராம்.

    மலையாளத்திலிருந்து தமிழுக்கும், பின்னர் தெலுங்குக்கும் போனவர் மமதா. தற்போது மலையாளம், தெலுங்கில் பிசியாக நடித்தும், பாடியும் வருகிறார்.

    இந்த நிலையில், நாடு முழுவதும் அலைக்கழித்து வரும் பன்றிக் காய்ச்சல் மமதாவையும் பீதிக்குள்ளாக்கியுள்ளது. காரணம், அவருக்கு இப்போது கடும் காய்ச்சல் வந்துள்ளது. இது சாதா காய்ச்சலா அல்லது பன்றிக் காய்ச்சலா என்று தெரியவில்லை.

    பன்றிக் காய்ச்சலாக இருக்கலாமோ என்ற பீதியில், படப்பிடிப்புகளை கேன்சல் செய்து விட்டாராம் மமதா.

    டாக்டர்கள்தான் ஒரு மாதத்திற்கு ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார் மமதாவின் தாயார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X