நான் பாக். போகவில்லை, மும்பையில்தான் இருக்கிறேன்- வீணா மாலிக்
வாகா எல்லை வழியாக அவர் பாகிஸ்தானுக்குப் போனதாகவும், வாகா எல்லை வரை தனது காரில் வீணாவை, அவரது தோழர் அஷ்மித் படேல் கொண்டு வந்து விட்டதாகவும், பின்னர் எல்லைக்குள் புகுந்த வீணாவை, அவரது நட்பு வட்டாரத்தைச் சேர்ந்த சிலர் வந்து பிக்கப் செய்து கொண்டு போனதாகவும் முன்னதாக வந்த செய்திகள் தெரிவித்தன.
முன்னதாக மும்பை வந்திருந்த வீணா மாலிக் அங்கு ஒரு படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருந்தார். ஆனால் திடீரென அவரைக் காணவில்லை. இதையடுத்து அவரது மேலாளர் பந்த்ரா காவல் நிலையத்தில் வீணாவைக் காணவில்லை என்று புகார் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
சமீபத்தில் எப்எச்எம் இதழுக்கு முழு நிர்வாண கோலத்தில் போஸ் கொடுத்திருந்தார் வீணா. மேலும் தனது தோள்பட்டையிலும் ஐஎஸ்ஐ என்ற முத்திரையைப் பதித்திருந்தார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஆனால் இது போலியான படம் என்று கூறிய வீணா, இதுதொடர்பாக நஷ்ட ஈடு கோரி எப்எச்எம் இதழுக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் இது உண்மையான படம்தான் என்று எப்எச்எம் கூறியது.
இந்த நிலையில்தான் வீணா மும்பை வந்து திடீரென மாயமாகி ரகசியமாக பாகிஸ்தானுக்குத் திரும்பி விட்டதாக தகவல்கள் தெரிவித்தன. வீணா லாகூரில் இருக்கிறாரா அல்லது வேறு எந்த நகரில் இருக்கிறார் என்பதும் குழப்பமாக இருந்தது.
அதேசமயம், அவர் விசாவைப் புதுப்பிப்பதற்காக பாகிஸ்தான் போய் விட்டதாக ஒரு தகவல் தெரிவித்தது. 45 நாள் விசாவில் இந்தியா வந்திருந்தார் வீணா. இது இன்னும் இரண்டு நாட்களில் முடிகிறது. இதனால்தான் அவர் பாகிஸ்தான் திரும்பியுள்ளதாகவும் கூறப்பட்டது.
வீணா மாலிக்கின் ஒரிஜினல் பெயர் ஜாஹிதா. பாஸ்போர்ட்டில் இதுதான் உள்ளது. மேலும் அவர் புர்க்கா அணிந்தபடி வந்ததால் வாகா எல்லையில் அவரை யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டது.
ஆனால் தான் பாகிஸ்தான் போகவில்லை என்றும் மும்பையில்தான் இருப்பதாகவும் கூறியுள்ளார் வீணா. இதுகுறித்து அவர் கூறுகையில், ஓய்வின்றி உழைத்ததால் நான் களைத்துப் போயுள்ளேன். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு விட்டது. இதனால்தான் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்து வருகிறேன். நான் பாகிஸ்தான் போகவில்லை. மும்பையில் உள்ள ஓக்வுட் ஹோட்டலில்தான் தங்கியுள்ளேன் என்று கூறியுள்ளார் வீணா.


Click it and Unblock the Notifications












