‘ஆம்பி வேலி’யில் வீடு, அசத்தும் நமீதா!

By Staff

Namitha
சஹாரா நிறுவனத்தின் மகா காஸ்ட்லி நகரம் ஆம்பி வேலி. மும்பை லோனாவாலாவுக்கு அருகில் உள்ள இனிய மலை வாசஸ்தலம். முழுக்க முழுக்க தனியாருக்குச் சொந்தமான நகரம் இது.

மும்பையிலிருந்து 122 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. சையாத்ரி மலை உச்சியில் 10000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது இந்த செயற்கை நகரம். இந்த ரம்யமான பிரதேசத்தில் தனி பங்களாக்கள் கட்டி விற்பனை செய்து வருகிறது சஹாரா நிறுவனம்.

இங்கு பாலிவுட் கனவுக் கன்னிகள் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, ப்ரீத்தி ஜிந்தா ஆகியோருக்கு தலா ஒரு ஏக்கரில் அரண்மனை மாதிரி வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளது சஹாரா சிட்டி. இங்கு வீடு வாங்கியுள்ள அனைவருமே டாப் விஐபிக்கள்தான்.

இங்குதான் வீடு வாங்க வேண்டுமென்பது தமிழ் கவர்ச்சிப் புயல் நமீதாவின் நீண்டகாலக் கனவாம். அந்தக் கனவும் இப்போது நனவாகி விட்டதாம் அம்மணிக்கு. அரை ஏக்கர் பரப்பளவில் அட்டகாசமான வில்லா ஒன்றை வாங்கி, தனது ரசனைக்கேற்ப அமைத்துக் கொண்டுள்ள நமீதா, இப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆம்பி வேலிக்குப் பறந்துவிடுகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X