Don't Miss!
- News இறங்கிய வேகத்திலேயே ஏறிய சின்ன வெங்காயம்.. கோயம்பேட்டில் இஞ்சி பாருங்க.. சென்னையில் காய்கறிகள் விலை
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ஷபானா ஆஸ்மிக்கு 59 வயது!
இன்று ஷபானா ஆஸ்மிக்கு 59 வயது. ஆனால் இன்று அவர் மும்பையில் இல்லை. மாறாக நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் நடக்கும் நாடகத்தில் கலந்து கொள்வதற்காக போயுள்ளார்.
தனது பிறந்த நாள் குறித்து ஷபானா ஆஸ்மி கூறுகையில், எனது கணவர் ஜாவேத் அக்தர் ஒரு இடத்தில் உன்னால் இருக்க முடியாது. உனது குடும்பத்தினர் நாடோடிக் கூட்டமாக இருந்திருக்க வேண்டும் என்று கிண்டலடிப்பார். காரணம், நான் ஒரு இடத்தில் இருக்க மாட்டேன். டிராவிலிலேயேதான் இருப்பேன்.
இன்று காத்மாண்டுவில் இருக்கிறேன். நாளை தென் ஆப்பிரிக்காவுக்குப் போகிறேன். பின்னர் டாக்கா செல்கிறேன். 28ம் தேதிதான் மும்பை திரும்புகிறேன்.
இந்த முறை எங்களது வீட்டில் ரம்ஜான், எனது பிறந்த நாள் என எந்தக் கொண்டாட்டமும் கிடையாது. காரணம், எனது நெருங்கிய தோழியின் கணவர் இறந்து விட்டார். அந்த சோகத்தில் இருக்கும் தோழிக்காக இந்தக் கொண்டாட்டங்களை தவிர்த்து விட்டோம் என்கிறார் ஷபானா.