Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஷபானா ஆஸ்மிக்கு 59 வயது!
இன்று ஷபானா ஆஸ்மிக்கு 59 வயது. ஆனால் இன்று அவர் மும்பையில் இல்லை. மாறாக நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் நடக்கும் நாடகத்தில் கலந்து கொள்வதற்காக போயுள்ளார்.
தனது பிறந்த நாள் குறித்து ஷபானா ஆஸ்மி கூறுகையில், எனது கணவர் ஜாவேத் அக்தர் ஒரு இடத்தில் உன்னால் இருக்க முடியாது. உனது குடும்பத்தினர் நாடோடிக் கூட்டமாக இருந்திருக்க வேண்டும் என்று கிண்டலடிப்பார். காரணம், நான் ஒரு இடத்தில் இருக்க மாட்டேன். டிராவிலிலேயேதான் இருப்பேன்.
இன்று காத்மாண்டுவில் இருக்கிறேன். நாளை தென் ஆப்பிரிக்காவுக்குப் போகிறேன். பின்னர் டாக்கா செல்கிறேன். 28ம் தேதிதான் மும்பை திரும்புகிறேன்.
இந்த முறை எங்களது வீட்டில் ரம்ஜான், எனது பிறந்த நாள் என எந்தக் கொண்டாட்டமும் கிடையாது. காரணம், எனது நெருங்கிய தோழியின் கணவர் இறந்து விட்டார். அந்த சோகத்தில் இருக்கும் தோழிக்காக இந்தக் கொண்டாட்டங்களை தவிர்த்து விட்டோம் என்கிறார் ஷபானா.