Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்திட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சமீராவுக்கு ப்ரியதர்ஷன் தந்த பிறந்த நாள் பரிசு!
சமீரா ரெட்டிக்கு பெரிய ஹிட் படம் கொடுத்தவர் ப்ரியதர்ஷன்தான். திடீரென்று சமீராவின் பிறந்த நாள் விருந்தினராக வருகை தந்த அவர், சமீராவை அழைத்து, எனது அடுத்த படத்தில் நீதான் நாயகி என்று கூற ஆனந்தத்தில் திக்குமுக்காடிப் போனாராம் சமீரா.
ப்ரியதர்ஷன் - லிஸ்ஸி தம்பதிகளுக்கு ரொம்ப நெருக்கமானவர் சமீரா. எப்போது சென்னை வந்தாலும் நேராக ப்ரியதர்ஷன் வீட்டுக்கு ஒரு விஸிட் அடித்துவிடுவாராம்.
இவர்கள் மூவரின் நெருக்கத்துக்கும் இன்னொரு காரணம் உண்டு. லிஸ்ஸி- ப்ரியதர்ஷன் திருமண நாளும், சமீராவின் பிறந்த தினமும் ஒரே தேதியில் வருவதுதானாம்.
இந்த ஆண்டு இவர்கள் மூவருமே ஒன்றாக தங்கள் விசேஷங்களைக் கொண்டாடியுள்ளனர். ஒரு பெரிய கேக் ஆர்டர் செய்து, மூவர் சார்பிலும் சமீரா அதை வெட்ட, சென்டிமெண்ட், அன்பு, நட்பு எல்லாம் ஆறாக ஓடியதாம் அங்கு.
பீகாரை மையமாகக் கொண்டு ப்ரியதர்ஷன் இயக்கும் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் சமீரா நடிக்கிறாராம். இதில் அஜய் தேவ்கன், அக்ஷய் கன்னா மற்றும் பிபாஷா பாஸுவும் நடிக்கிறார்கள்.
தொடர்ந்து மூன்று படங்கள் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் நடித்தது தனக்குப் பெருமையாக உள்ளதாக தெரிவித்தார் சமீரா.
கேரியர் ஸ்டெடியாக இருந்தாலும், வாழ்க்கையில் இன்னும் தனக்கேற்ற ஆண் துணை இல்லாமல் இருப்பதில் சமீராவுக்கு ஏக வருத்தமாம். இதைப் போக்குவது யோகாதான் என்கிறார் சமீரா.
'உடலை அழகாக மட்டும் வைத்துக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது, மனதுக்குப் பிடித்தவர் அருகிலிருந்து அதை ரசிக்காத வரை!' என்கிறார் சமீரா.
நல்ல சிந்தனைதான்!