'எக்ஸ்க்யூஸ் மீ' நான் டயட்டில் இருக்கிறேன்: அஞ்சலி
'அங்காடித் தெரு' அஞ்சலி எடையைக் குறைக்க டயட்டில் உள்ளாராம். வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி தனது உடல் எடையைக் குறைக்கும் முயற்சியாம் இது.
அங்காடித் தெரு புகழ் நடிகை அஞ்சலிக்கு அண்மையில் எடை கூடிவிட்டது. இதனால் அவர் வருத்தம் அடைந்தார். இப்படி எடைக் கூடிவிட்டதே என்று நினைத்த அஞ்சலி தற்போது டயட்டில் உள்ளார். அரிசி உணவு வகைகளைச் சாப்பிடுவதால் தான் எடை கூடுகிறது என்று அவர் கருதினார்.
இதையடுத்து தற்போது அரிசி உணவை தொட்டுக்கூட பார்ப்பதில்லை. வெறும் சப்பாத்தியைத் தான் சாப்பிடுகிறார். இது தவிர ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சியும் செய்து வருகிறார்.
விரைவில் ஸ்டைலான, ஸ்லிம்மான அஞ்சலியைப் பார்க்கலாமாம்...'குண்டாகாமல்' பார்த்துக்கங்க அஞ்சலி!
Comments


Click it and Unblock the Notifications