Don't Miss!
- Sports கேமரா மேனை சிக்சரால் பதம் பார்த்த ரிஷப் பண்ட்.. விசயம் தெரிந்த உடன் பண்ட் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உதவியாளர் மாயம்-அசினை விசாரிக்க போலீஸ் குழு விரைகிறது
சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்தவர் சுடலை வடிவு. இவர் புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், எனது மகன் நல்லமுத்துக்குமார் முன்பு நடிகர் விஜய்யிடம் உதவியாளராகப் பணியாற்றினார்.
போக்கிரி படத்தில் நடித்தபோது அவரது செயல் பிடித்துப் போகவே நடிகை அசின் எனது மகனை தனது உதவியாளராக வைத்துக் கொண்டார்.
எங்கு சென்றாலும் கூடவே அழைத்துச் செல்வார். அவரது அனைத்து அந்தரங்கங்களும் எனது மகனுக்குத் தெரியும் என்பதால் யாருடனும் பேச விட மாட்டார். என்னுடன் மட்டும் போனில் பேசுவான் முத்துக்குமார்.
இந்த நிலையில் திடீரென அவனுக்கு விபத்து ஏற்பட்டது. இதையடுத்து முன்பு போல எனது மகனை அசினும், அவரது தந்தையும் நடத்தாமல் அடிக்கடி திட்டி சித்திரவதை செய்துள்ளனர். இதை எனது மகன் என்னிடம் சொல்லி அழுவான்.
இந்த நிலையில் அவனைக் காணவில்லை. அனைத்து ரகசியங்களும் அவனுக்குத் தெரியும் என்பதால் எனது மகனை அசினும், அவரது தந்தையும் கடத்தி வைத்திருக்கலாம் என சந்தேகிக்கிறேன்.
எனது மகனை மீட்டுத் தர வேண்டும் என்று புகாரில் கூறியிருக்கிறார் சுடலைவடிவு.
இதுகுறித்து விசாரணை நடத்துமாறு செங்குன்றம் போலீசாருக்கு கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டார். அதன்படி செங்குன்றம் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் அசினின் தந்தை ஜோசப்பிடம் செல்போன் மூலம் பேசினார்.
இதையடுத்து அசினிடமும் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். அதற்காக தனிப்படை போலீஸார் மும்பை செல்லவுள்ளனர்.