twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படப்பிடிப்புக்கு வர மறுக்கிறார் - மீனாட்சி மீது புகார்

    By Staff
    |

    Meenakshi
    படப்பிடிப்புக்கு வர மறுத்த நடிகை மீனாட்சி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்யட்டுள்ளது.

    கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், மீனாட்சி. தனது எக்குத் தப்பான போஸ்கள் மூலம் கவர்ச்சிக்கு புது இலக்கணமே படைத்துவரும் மீனாட்சி இப்போது 'அகம் புறம்' எனும் புதிய படத்தில் நடித்துவருகிறார்.

    ஷாம் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் சில தினங்கள் கலந்து கொண்டார் மீனாட்சி.

    ஆனால் இந்தப் படத்தின் மலேஷிய ஷெட்யூலில் நடிக்க முதலில் ஒப்புக் கொண்டவர் பின்னர் படப்பிடிப்புக்கு வர மறுத்ததாகக் கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து 'அகம் புறம்' படத்தின் டைரக்டர் திருமலை, மீனாட்சி மீது நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளில் புகார் செய்தார்.

    நடிகர் சங்கம் சார்பிலும், தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும் மீனாட்சியுடன் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டார்கள்.

    பின்னர் ஒப்புக் கொண்டபடி இந்தப் படத்தில் நடித்து முடிப்பதாக மீனாட்சி ஒப்புக் கொண்டுள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X