பிரபுதேவா மூலம் இந்தியில் நுழையும் நயன்!

விளைவு, பிரபுதேவாவே அவரை இந்திப்படம் ஒன்றில் அறிமுகம் செய்யப் போகிறாராம்.
இப்படத்தில் சல்மான்கான் கதாநாயகனாக நடிக்கிறார். பிரபுதேவா இயக்குகிறார்.
இப்போது தமிழில் சூர்யாவுடன் நயன்தாரா நடித்துவரும் ஆதவன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளதால், தனது அடுத்த படமாக இந்திப் படம் இருக்க வேண்டும் என பிரபுதேவாவுக்கு அன்புக் கட்டளையே போட்டுவிட்டாராம் அம்மணி.
இதற்கிடையே, நயன்தாராவுக்கு காதல் பரிசாக ஐதராபாத்தில் பிரபுதேவா பெரிய பங்களா வாங்கிக் கொடுத்துள்ளதாகவும், இருவரும் இப்போது இந்த பங்களாவில்தான் தங்குகிறார்கள் என்றும் ஆந்திரப் பத்திரிகைகள் எழுத ஆரம்பித்துள்ளன.
Comments


Click it and Unblock the Notifications