Don't Miss!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- News சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணை.. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோர்ட்டில் ஆஜர்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஸ்னேகா... புன்னகைக்குப் பின்னால் பல புதிர்கள்!
பெரிய படங்களோ, வெற்றிகளோ இல்லாவிட்டாலும் இந்த அளவு முக்கியத்துவத்தை எப்போதும் தக்க வைத்துக் கொள்வது சாதாரண விஷயமா என்ன?.
ராகவேந்திரா என்ற நபர் யாரென்றே தனக்குத் தெரியாது என ஸ்னேகா கூறினாலும், அதில் உண்மையில்லை என்கிறது போலீஸ் தரப்பு. காரணம் பல முறை ஸ்னேகாவை ஒரு தயாரிப்பாளர் என்ற போர்வையில் சந்தித்துள்ளார் ராகவேந்திரா. ஸ்னேகாவின் தந்தைக்கும் இந்த ராகவேந்திராவை நன்கு தெரியுமாம்.
ஸ்னேகாவிடம் தன்னை ஒரு பெரிய தயாரிப்பாளராகக் காட்டிக் கொள்ள ஏராளமான பரிசுகளை வாங்கிக் கொடுத்ததாக ராகவேந்திரா போலீசாரிடம் கூறியுள்ளார். மேலும் அவரை தன் வழிக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்த ஸ்னேகாவுக்கு நெருக்கமான ஒரு பெண்மணியிடமும் பல லட்சம் ரூபாய் பெறுமான பரிசுகளை ஸ்னேகாவுக்காக வாங்கிக் கொடுத்துள்ளார் ராகவேந்திரா.
இவை எதையும் தான் பெற்றுக் கொள்ளவில்லை என்று ஸ்னேகா கூறினாலும், தனக்காக ராகவேந்திரா இதையெல்லாம் செய்கிறார் என தெரிந்தும் ஆரம்பத்திலேயே இதை முடிவுக்கு கொண்டுவராமல், ஒவ்வொரு முறை ராகவேந்திரா சந்திக்க வந்தபோதும் ஸ்னேகா அவரைச் சந்தித்துள்ளதாக போலீசார் இப்போது 'யு டர்ன்' அடித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் போலீசார் ஒரே பக்கமாக விசாரிக்கக் கூடாது என ராகவேந்திரா தரப்பில் கோரப்பட்டுள்ளதாம்.