Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கவர்ச்சிக்கு ரெடி-விஜயலட்சுமி!
காதல் கோட்டை கட்டிய அகத்தியனின் மகள்தான் விஜயலட்சுமி. இதுநாள் வரை கோடம்பாக்கத்தில் பலரும் இப்படித்தான் விஜயலட்சுமியைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போதோ, அஞ்சாதே விஜயலட்சுமி என்ற புதிய அடை மொழி அவரைத் தேடி வந்துள்ளது.
அகத்தியன் மகள் என்ற பெருமை போய், அஞ்சாதே விஜயலட்சுமி என்று தான் அழைக்கப்படுவதை பெருமையாக கருதுகிறார் விஜயலட்சுமி. எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறுவது போல, இந்தப் புகழுக்கும், பெருமைக்கும் காரணம மிஷ்கின்தான் என்று மிஷ்கினைப் பாராட்டுகிறார்.
முதல் படத்திலேயே விஜயலட்சுமி பாராட்டப்பட்டார். சென்னை 600028 படத்தில் அவரது பாந்தமான கேரக்டரை பலரும் பாராட்டினர். நல்லா நடிக்கிறாரே என்ற பாராட்டையும் அவர் பெற்றார். அஞ்சாதே மூலம்
வெரிகுட் நடிகை என்ற பெயர் விஜயலட்சுமிக்குக் கிடைத்துள்ளது.
மிஷ்கின் அவ்வளவு சீக்கிரம் திருப்தி அடைய மாட்டார். பக்காவாக காட்சி வர வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார். பிரசன்னாவை நான் செருப்பால் அடிப்பது போன்ற ஒரு காட்சி. நான் தயங்கினேன். பிரசன்னாவோ நிஜமான செருப்பால் அடிக்குமாறு உற்சாகப்படுத்தினார். நானும் பிறகு தயக்கத்தை விட்டு விட்டு நடித்தேன். அந்தக் காட்சிக்கு ரசிகர்களிடம் அப்படி ஒரு அப்ளாஸ் என்கிறார் சந்தோஷமாக.
தன்னை ராசியான நடிகை என்று கோலிவுட் அழைக்க ஆரம்பித்திருப்பது விஜயலட்சுமிக்கு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளதாம். ஆனால் முதல் இரு படங்களிலும் அமைதியான பெண்ணாக வந்து விட்டேன். ஆனால் அடுத்த படங்களில் படு சுட்டித்தனமான, ரகளையான பெண்ணாக வர வேண்டும் எனது தனது சின்னச் சின்ன ஆசையை வெளிப்படுத்துகிறார் விஜயலட்சுமி.
இப்போதைய கவர்ச்சி டிரெண்டுக்கு உட்பட்டு போக தானும் தயார்தான் என்கிறார் விஜயலட்சுமி. ஆனால் கதைக்கு தேவை என்று இருந்தால், கொஞ்சம் போல கவர்ச்சிக் காட்டி நடிக்கத் தயார். ஆனால், தொப்புளைக் காட்டுவது போன்ற காட்சிகளில் எல்லாம் நடிக்க முடியாது என்கிறார் கண்டிப்பாக.
நியாயமான கண்டிஷன்தான்.