Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கவர்ச்சிக்கு ரெடி-விஜயலட்சுமி!
காதல் கோட்டை கட்டிய அகத்தியனின் மகள்தான் விஜயலட்சுமி. இதுநாள் வரை கோடம்பாக்கத்தில் பலரும் இப்படித்தான் விஜயலட்சுமியைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போதோ, அஞ்சாதே விஜயலட்சுமி என்ற புதிய அடை மொழி அவரைத் தேடி வந்துள்ளது.
அகத்தியன் மகள் என்ற பெருமை போய், அஞ்சாதே விஜயலட்சுமி என்று தான் அழைக்கப்படுவதை பெருமையாக கருதுகிறார் விஜயலட்சுமி. எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறுவது போல, இந்தப் புகழுக்கும், பெருமைக்கும் காரணம மிஷ்கின்தான் என்று மிஷ்கினைப் பாராட்டுகிறார்.
முதல் படத்திலேயே விஜயலட்சுமி பாராட்டப்பட்டார். சென்னை 600028 படத்தில் அவரது பாந்தமான கேரக்டரை பலரும் பாராட்டினர். நல்லா நடிக்கிறாரே என்ற பாராட்டையும் அவர் பெற்றார். அஞ்சாதே மூலம்
வெரிகுட் நடிகை என்ற பெயர் விஜயலட்சுமிக்குக் கிடைத்துள்ளது.
மிஷ்கின் அவ்வளவு சீக்கிரம் திருப்தி அடைய மாட்டார். பக்காவாக காட்சி வர வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார். பிரசன்னாவை நான் செருப்பால் அடிப்பது போன்ற ஒரு காட்சி. நான் தயங்கினேன். பிரசன்னாவோ நிஜமான செருப்பால் அடிக்குமாறு உற்சாகப்படுத்தினார். நானும் பிறகு தயக்கத்தை விட்டு விட்டு நடித்தேன். அந்தக் காட்சிக்கு ரசிகர்களிடம் அப்படி ஒரு அப்ளாஸ் என்கிறார் சந்தோஷமாக.
தன்னை ராசியான நடிகை என்று கோலிவுட் அழைக்க ஆரம்பித்திருப்பது விஜயலட்சுமிக்கு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளதாம். ஆனால் முதல் இரு படங்களிலும் அமைதியான பெண்ணாக வந்து விட்டேன். ஆனால் அடுத்த படங்களில் படு சுட்டித்தனமான, ரகளையான பெண்ணாக வர வேண்டும் எனது தனது சின்னச் சின்ன ஆசையை வெளிப்படுத்துகிறார் விஜயலட்சுமி.
இப்போதைய கவர்ச்சி டிரெண்டுக்கு உட்பட்டு போக தானும் தயார்தான் என்கிறார் விஜயலட்சுமி. ஆனால் கதைக்கு தேவை என்று இருந்தால், கொஞ்சம் போல கவர்ச்சிக் காட்டி நடிக்கத் தயார். ஆனால், தொப்புளைக் காட்டுவது போன்ற காட்சிகளில் எல்லாம் நடிக்க முடியாது என்கிறார் கண்டிப்பாக.
நியாயமான கண்டிஷன்தான்.