Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
விந்தியா-சொர்ணமால்யா 'கபடி'!
நடிகை விந்தியா நாயகியாக நடித்துள்ள இந்தப்படம் சில வருடங்களுக்கு முன் பூஜை போடப்பட்டது. ஆனால் அதற்குள் விந்தியாவின் மார்க்கெட் அதலபாதாளத்துக்குப் போய்விட, படமும் பெட்டிக்குள்ளேயே முடங்கி விட்டது.
இந்தப் படத்தில் யோகா டீச்சராக நடித்துள்ளார் விந்தியா. கவர்ச்சியில் பல படிகள் கீழிறங்கி இருக்கிறாராம். இது போதாதென்று, கவர்ச்சி 'குண்டு' சொர்ணமால்யா வேறு தன் பங்குக்கு கன்னாபின்னாவென்று கவர்ச்சி காட்டியிருக்கிறாராம்.
அதிகபட்ச குறைந்த உடையில் தோன்றுவது யார் என இருவருக்கும் பெரிய போட்டியே நடந்துள்ளதாம் இப்படத்தின் ஒரு பாடல் காட்சியில். சபாஷ் சரியான போட்டி என்று ரசிகர்கள் தொடையில் தட்டி (அவரவர் தொடையில்தான்) குஷியாகப் படத்தைப் பார்ப்பது நிச்சயம் என்கிறார்கள்.
இவ்வளவு 'சிறப்புகள்' படத்தில் இருந்தாலும், படம் போனியாகாமல் இருப்பது ஏன் என நண்பர்கள் கேட்ட கேள்வியில் சிலிர்த்து எழுந்த படத்தின் தயாரிப்பாளர், எடுத்த வரைக்கும் உள்ள காட்சிகளை பிரசாத் லேப்பில் மீண்டும் போட்டுப் பார்த்தாராம். சில விநியோகஸ்தர்களுக்கும் போட்டுக் காட்டியதில், படத்தை உடனே வாங்க அட்வான்ஸ் கொடுத்து விட்டார்களாம்.
பிறகென்ன, படத்தை அடுத்த மாதம் வெளியிடும் வேலையில் வேகவேகமாக இறங்கியுள்ளது தயாரிப்பு பார்ட்டி.
இப்போதுதான் விந்தியாவுக்கு கல்யாணமானது. குடியும், குடித்தனமுமாக சந்தோஷ வாழ்க்கையை ஆரம்பித்துள்ள விந்தியாவுக்கு இந்தச் செய்தி இனிப்பாக இல்லையாம்...
என்ன செய்வது... உரலுக்குள் தலையைக் கொடுத்தபிறகு விழுகிற இடிக்குப் பயந்தால் என்னாவது?