Don't Miss!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- News வேணாம்.. தப்பாக போயிரும்..! வாக்குச் சாவடியில் முதல்வர் ஸ்டாலின் செய்த செயல்.. அதிசயித்த மக்கள்..!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சென்னையில் குடியேறிய அனுஷ்கா!
ரெண்டு என்ற தமிழ்ப் படம் மூலம் நடிக்க வந்த அனுஷ்கா அதன் பின்னர் தெலுங்குக்கு தாவினார். அங்கு ஹிட் படங்களில் நடித்து வந்த அவர் அருந்ததி படம் மூலம் சூப்பர் ஹிட் நாயகியானார்.
இந்த நிலையில் அவரைப் பிடித்து தமிழுக்கு மீண்டும் கொண்டு வந்தனர். விஜய்க்கு ஜோடியாக வேட்டைக்காரனில் நடிக்க வைத்தனர். விஜய்யுடன் ஜோடியாக நடிப்பதால் தனக்கு தமிழில் மீண்டும் மார்க்கெட் கிடைக்கும், தமிழிலும் முன்னணிக்கு வந்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக வேட்டைக்காரன் படுத்து விட்டதால் அப்செட் ஆனார். ஆனால் தற்போது சிங்கம் வந்து அவரைக் காப்பாற்றியுள்ளது.
சிங்கம் படம் ஹிட்டாகியுள்ளதால் அனுஷ்காவும் குஷியாகியுள்ளார். ராசியில்லாத நடிகை என்று தன்னை முத்திரை குத்திவிடாமல் காப்பாற்றிய படம் என்பதால் சிங்கத்தின் வெற்றி அவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.
இதையடுத்து தன்னைத் தேடி நிறைய தமிழ்ப் பட வாய்ப்புகள் வரும் என்ற நம்பிக்கையில் சென்னையில் ஒரு பங்களாவை வாடகைக்குப் பிடித்து இங்கு இடம் மாறியுள்ளார்.
இனி தான் சென்னையில்தான் தங்கி இருக்கப் போவதாகவும் தகவலை பரப்பியுள்ளாராம்.
எனவே அனுஷ்காவைப் புக் செய்ய நினைக்கும் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் ஹைதராபாத் போய் கஷ்டப்பட வேண்டியதில்லை.