Don't Miss!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News கடனுக்காக இரவில் அசிங்கமாக பேசிய நிதி நிறுவன ஊழியர்கள்? தேனியில் குடும்பமே தற்கொலை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கார்த்திகா மீது புகார்!
தூத்துக்குடி படத்தில் கருவாப்பையா, கருவாப்பையா... என பாடி அறிமுகமானவர் கார்த்திகா. பின்னர் பிறப்பு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது ராமன் தேடிய சீதை படத்தில் நடித்து வருகிறார்.
விருகம்பாக்கத்தில் தனது தாயுடன் வசித்து வருகிறார்.
இவருக்கு எதிராக ஆர்.மணிவண்ணன் என்பவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
விருகம்பாக்கம் எஸ்.பி.ஐ. காலனியில் எனக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதனை வாங்கியதற்கான கடன் தவணை தொகையை வங்கியில் செலுத்தி வருகிறேன்.
என்னுடைய இந்த குடியிருப்பில் நடிகை கார்த்திகா, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குடி வந்தார். ஒரு மாதம்தான் வாடகை தந்தார். அதன் பிறகு கடந்த 7 மாதங்களாக அவர் எனக்கு வாடகை தரவில்லை. இதனால் என்னுடைய வங்கி கடனை கூட அடைக்க முடியவில்லை.
இதுவரை நடிகை கார்த்திகா ரூ. 49 ஆயிரம் வாடகை பாக்கி வைத்துள்ளார். இதனை தருமாறு கேட்டால், கார்த்திகாவும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து கொண்டு என்னை மிரட்டுகிறார்கள்.
வாடகை பாக்கியை கேட்டால் உன்னையும், உன்னுடைய குடும்பத்தையும் கொலை செய்துவிடுவோம் என்று நடிகை கார்த்திகா தன்னுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டு என்னை மிரட்டுகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...'
இந்தப் புகார் குறித்து கார்த்திகாவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.