Don't Miss!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
மறுபடியும் 5 நாயகிகள்!
ராமன் தேடிய சீதை வணிக ரீதியாக நன்றாகப் போவதால் அந்த செண்டிமெண்டை விடுவானேன் என்று, அதே போன்றதொரு கதையைத் தயார் செய்துள்ளார் ஜெகன்நாத்.
தனது புதுப்படம் குறித்து அவர் கூறியதாவது:
ராமன் தேடிய சீதைக்குப் பிறகு அடுத்தப் படத்துக்கான கதையை தயார் செய்துவிட்டேன்.
பொதுவாக வங்காள மொழிப் படங்கள்தான் தரமானவை என்று நம்மவர்கள் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். முயற்சித்தால் வங்காள மொழிப் படங்களை விட தரத்திலும் தொழில் நுட்பத்திலும் மேம்பட்ட பல படங்களை நம்மால் தர முடியும். அதற்கான வாய்ப்புகள் இங்குள்ளன.
வங்காள மொழி மட்டுமல்ல, இந்திய திரையுலகமே திரும்பிப் பார்க்கும்படியான படங்களைத்தான் இனி தரப்போகிறேன்.
எனது அடுத்த படம் இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் படமாக உள்ளது. ராமன் தேடிய சீதை போல இதிலும் 5 கதாநாயகிகள். நாயகனாக பசுபதி நடிக்கிறார். ஜனவரி மாதம் படப்பிடிப்பு, என அடுக்கிக் கொண்டே போகிறார் ஜெகன்நாத்.
கதைக்கு தேவையென்றால் இன்னும் 5 நாயகிகள் கூட சரிதான். ஆனால் வெறும் செண்டிமெண்டுக்காகவென்றால் சரிப்படுமா பிரதர்!--