பிரகாஷ் ராஜ் முதல் மனைவி லலிதகுமாரி மீண்டும் நடிக்கிறார்!!

மனதில் உறுதி வேண்டும் வீடு மனைவி மக்கள், புதுப் புது அர்த்தங்கள், புலன் விசாரணை, சிகரம் என பல படங்களில் நடித்தவர் லலிதகுமாரி. பிரகாஷ்ராஜை காதலித்து திருமணம் செய்தார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
ஆனால் கடந்த ஆண்டு பிரகாஷ் ராஜிடமிருந்து விவாகரத்து பெற்றார்.
தற்போது பள்ளிக் கூடம் போகாமலே என்ற படம் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார்.
தனது மறுபிரவேசம் குறித்து அவர் கூறுகையில், "பாலச்சந்தரால் மனதில் உறுதி வேண்டும் படத்தில் அறிமுகமானேன். நிறைய வெற்றிப் படங்களில் நடித்தேன். தெலுங்கிலும் நடித்துள்ளேன். மீண்டும் சினிமாவில் நடிப்பதென முடிவு செய்ததும் நிறைய வாய்ப்புகள் வந்தன.
ஆனால் எனக்குப் பிடித்த, பொருத்தமான கதைக்காக காத்திருந்தேன். நான் எதிர்பார்த்த மாதிரி 'பள்ளிக் கூடம் போகாமலே' படத்தின் கதையும் கேரக்டரும் அமைந்தது.
இயக்குனர் பி.ஜெயசீலன் என்னிடம் கதை சொன்ன போது மிகவும் பிடித்தது. உடனே ஒப்புக் கொண்டேன். கணவனை விட்டு கொடுக்காத மனைவியாகவும் மகன் மீது பாசம் வைத்துள்ள அம்மாவாகவும் எனது கேரக்டர் சித்தரிக்கப்பட்டுள்ளது. நல்ல கேரக்டர்கள் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











