Don't Miss!
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: கர்நாடகா, கேரளா உட்பட் 13 மாநிலங்கள்- 88 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிரகாஷ் ராஜ் முதல் மனைவி லலிதகுமாரி மீண்டும் நடிக்கிறார்!!
மனதில் உறுதி வேண்டும் வீடு மனைவி மக்கள், புதுப் புது அர்த்தங்கள், புலன் விசாரணை, சிகரம் என பல படங்களில் நடித்தவர் லலிதகுமாரி. பிரகாஷ்ராஜை காதலித்து திருமணம் செய்தார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
ஆனால் கடந்த ஆண்டு பிரகாஷ் ராஜிடமிருந்து விவாகரத்து பெற்றார்.
தற்போது பள்ளிக் கூடம் போகாமலே என்ற படம் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார்.
தனது மறுபிரவேசம் குறித்து அவர் கூறுகையில், "பாலச்சந்தரால் மனதில் உறுதி வேண்டும் படத்தில் அறிமுகமானேன். நிறைய வெற்றிப் படங்களில் நடித்தேன். தெலுங்கிலும் நடித்துள்ளேன். மீண்டும் சினிமாவில் நடிப்பதென முடிவு செய்ததும் நிறைய வாய்ப்புகள் வந்தன.
ஆனால் எனக்குப் பிடித்த, பொருத்தமான கதைக்காக காத்திருந்தேன். நான் எதிர்பார்த்த மாதிரி 'பள்ளிக் கூடம் போகாமலே' படத்தின் கதையும் கேரக்டரும் அமைந்தது.
இயக்குனர் பி.ஜெயசீலன் என்னிடம் கதை சொன்ன போது மிகவும் பிடித்தது. உடனே ஒப்புக் கொண்டேன். கணவனை விட்டு கொடுக்காத மனைவியாகவும் மகன் மீது பாசம் வைத்துள்ள அம்மாவாகவும் எனது கேரக்டர் சித்தரிக்கப்பட்டுள்ளது. நல்ல கேரக்டர்கள் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன்," என்றார்.