Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்திரா காந்தியாக மாதுரி தீக்ஷித்!!
தேஸாப், தில் தோ பாகல் ஹை, தேவ்தாஸ் என வெற்றிப் படங்களில் நடித்தவர் மாதுரி தீக்ஷித். பாலிவுட்டில் அதிக ஆண்டுகள் முதல் நிலை நாயகியாகவே இருந்தவர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இவர் உச்சத்தில் இருந்தார். திருமணமானாலும் நடிப்பைத் தொடரும் மாதுரிக்கு இரு மகன்கள் உள்ளனர். இப்போது 42 வயதான நிலையில் மாதுரி இந்தப் படம் மூலம் அடுத்த ரவுண்டுக்கு ஆயத்தமாகிறார் பாலிவுட்டில்.
மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு இப்போது திரைப்படமாகத் தயாராகிறது. இந்தப் படத்தில் நடிக்க மாதுரி தீக்ஷித்தான் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இப்படத்தை பிரபல டைரக்டர் கிருஷ்ணாஷா இயக்குகிறார். திரைக்கதை, தயாராகிவிட்டது. வருகிற ஏப்ரல் மாதம் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டு உள்ளனர். 2011 இறுதியில் படம் ரிலீசாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா போன்ற நாடுகளில் நடக்க உள்ளது.
இந்திராவின் இளமைப் பருவம், திருமண வாழ்க்கை, அரசியல் பிரவேசம், பிரதமரானது இறுதியில் பாதுகாவலராலேயே சுட்டுக்கொல்லப்பட்டது போன்ற அனைத்தும் இப்படத்தில் காட்சிகளாக்கப்படுகின்றன.
ஒரு சந்தோமான செய்தி... இந்தப் படத்தில் வழக்கமான பாடல்கள் இருக்காது!