Don't Miss!
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தெலுங்கு தேசத்துக்கு பிரச்சாரமா?-பூமிகா
தமிழ்-தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் பூமிகா. சமீபத்தில் இவர் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடந்த ரத்த வங்கி ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரை சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ் வரவேற்றார். பின்னர் இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
இதையடுத்து பூமிகா தெலுங்கு தேசத்தில் சேர்ந்து விட்டதாகவும் அக்கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் என்றும் செய்தி பரவியது. இந்நிலையில் ஹைதராபாத்தில் நிருபர்களிடம் பூமிகா கூறியதாவது:
எனக்கு சமூக சேவையில் ஆர்வம் அதிகம். அதனால்தான் நான் தெலுங்குதேசம் கட்சி நடத்திய ரத்த வங்கி விழாவில் கலந்து கொண்டேன்.
இதை வைத்து நான் தெலுங்குதேசத்தில் சேர்ந்து பிரசாரம் செய்யப் போவதாக வதந்தியை பரப்பி விட்டார்கள். இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக உள்ளது.
எனக்கு சமூக சேவையில்தான் ஆர்வமே தவிர அரசியலில் இல்லை. இப்போதைக்கு என் லட்சியம் எல்லாம் சினிமாவில் நன்றாக நடித்து பெயர் எடுப்பதுதான். தெலுஙஅகு தேசத்தில் நான் இணைந்து விட்டதாக எனக்கு வேண்டாத சிலர்தான் வதந்தியை பரப்பி வருகிறார்கள், என்றார் பூமிகா.