Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சோனியாவின் முட்டாள்தனமான முடிவுகள்! - ரோஜா தாக்கு
ஆந்திராவில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி கட்டணம் அளிக்கக்கோரி ஜெகன்மோகன்ரெட்டி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதில் நடிகை ரோஜா கலந்து கொண்டு பேசியதாவது:
ராஜசேகர ரெட்டி ஆந்திராவில் முதல்வராக இருந்தபோது சோனியா- ராகுல் காந்திக்கு நல்ல செல்வாக்கை உருவாக்கி வைத்தார். அவரது மரணத்திற்கு பின் சோனியா எடுத்த தவறான முடிவுகளால் காங்கிரஸ் மட்டுமல்ல, சோனியா - ராகுல் செல்வாக்கும் அடியோடு சரிந்துவிட்டது.
நானும் சோனியாவை மிகப்பெரிய புத்திசாலியான தலைவர் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் ஆந்திர அரசியலில் எடுத்து வரும் நடவடிக்கைகள் முட்டாள்தனமாக உள்ளன.
மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக உள்ள ஜெகன்மோகன் ரெட்டியை பதவி விலகச் செய்து ஆந்திராவில் காங்கிரசை ஒழித்து விட்டார். தற்போது கிராமப்புறங்களில் காங்கிரசுக்கு தொண்டர்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வாக்குச் சாவடிக்கு ஒரு ஏஜெண்டுக்கு கூட ஆள் இல்லாத நிலை. பீகாரில் காங்கிரஸ் பெற்ற தோல்விதான் அடுத்த தேர்தலில் இங்கும் கிடைக்கும்.
தற்போது மந்திரி பதவியில் உள்ளவர்கள் கூட பதவிக் காலம் முடிந்ததும் ஜெகன் பக்கமே வந்து விடுவார்கள். இனி சோனியா- ராகுல் காந்தியால் ஆந்திராவில் செல்வாக்குப் பெற முடியாது", என்றார்.