twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காலியாக இருக்கும் சிம்ரன்-குறி வைக்கும் சனா கான்

    By Sudha
    |

    Sana Khan
    கவர்ச்சி, நடிப்பு என இரண்டையும் கலந்து அடித்துக் கலக்கிய சிம்ரன் போல ஆக விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் சனா கான்.

    சிலம்பாட்டம் மூலம் தமிழில் நடிக்க வந்த சனா கான், கவர்ச்சிகரமான நடிகை என்ற பெயரை எடுத்தவர். ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கவர்ச்சியை மூட்டை கட்டி வைத்து அடக்கம் ஒடுக்கமாக நடித்துள்ளார்.

    அப்படியானால் இனி கவர்ச்சி கிடையாதா என்றால், சிம்ரன் இருந்தார். நடிப்பிலும், கவர்ச்சியிலும் கலக்கியவர். அவரது இடத்தை நிரப்ப யாரும் இன்னும் வரவில்லை.

    எனக்கும் கூட நடிப்பிலும், கவர்ச்சியிலும் கலக்க வேண்டும் என்பதே ஆசை. கவர்ச்சியாகவும் நடிப்பேன், ஆயிரத்தில் ஒருவன் போலவும் நடிப்பேன்.

    நான் இளம் வயது நடிகை. எனவே கவர்ச்சி வேண்டாம் என்று சொல்ல மாட்டேன், சொல்லவும் முடியாது. முழுப் படத்திலும் கவர்ச்சிகரமாக நடிக்க நான் தயார்தான். அதேசமயம், பாவாடை, தாவணியில் வந்து போகவும் ஆசை உண்டு.

    கவர்ச்சியில்லாமல் நடிப்பதும் அழகான சினிமாதான். ஆனால் அப்படிப்பட்ட படங்களில் நடிப்பது அபூர்வமாக இருக்க வேண்டும்.

    தெலுங்கில் இப்போது கத்தி என்ற படத்தில் நடித்துள்ளேன். தூக்கலான கவர்ச்சி அதில். அங்கு ரசிகர்கள் கவர்ச்சி இல்லாவிட்டால் படத்தை ரசிக்க மாட்டார்கள். கவர்ச்சிக்காகவே வருகிறார்கள். எனவே அங்கு கவர்ச்சியாக மட்டுமே நடிக்க முடியும் என்கிறார் சனா.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X