Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும்-திருமணம் குறித்து தீபிகா
நடித்து வெளி வந்த படங்கள் கொஞ்சம்தான். ஆனால் தீபிகா குறித்து நிறைய செய்திகள். காதல், காதல் ரத்து, மறுபடியும் காதல் என்று ஏகப்பட்ட காதல் கிசுகிசுக்கள் இந்த கன்னத்து குழியழகி குறித்து.
சமீப காலமாக விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த்துடன், தீபிகா நெருக்கமாக இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. சமீபத்தில் சித்தார்த் மல்லையா தலைமையில் நடந்த கிங்பிஷர் காலண்டர் அறிமுக விழாவில் தீபிகா படுகோனே கலந்து கொண்டார்.
அப்போது அவரிடம் திருமணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், திருமணம் என்பது யாராலும் திட்டமிட முடியாது. அது நடக்க வேண்டிய நேரத்தில், கரெக்டா நடக்கும் என்று 'சூப்பர் ஸ்டார்' ஸ்டைலில் பதில் கூறினார்.
தீபிகாவும், சித்தார்த் மல்லையாவும் காதலிப்பது உலகறிந்த செய்தி. இதை அவர்கள் என்னதான் மறைத்து வைக்க முயன்றாலும் முடியவில்லை, பொங்கி வெளியே வந்து விடுகிறது. தீபிகா எங்கு சென்றாலும் சித்தார்த் இல்லாமல் போவதில்லை. அப்படி போனாலும், பின்னாடியே சித்தார்த்தும் வந்து விடுகிறாராம்.
நட்சத்திர ஹோட்டல்களில் இருவரும் ஜோடியாக நடனம் ஆடுகின்றனர். இதை விட இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த, தீபிகா ஒல்லியாக இருப்பதால் அவருக்கு சரியான ஜோடியாக இருப்பதற்காக சித்தார்த் பல கிலோ குறைத்துள்ளார் என்பதே போதுமானது.
ஸ்டைலா பதில் சொல்றதெல்லாம் இருக்கட்டும், கடைசியில் நாங்கள் வெறும் நண்பர்கள் தான் எனறு சொல்லாம இருந்தால் சரிதான்.