தொட்டா... அவ்ளோதான்! - சார்மி

காதல் அழிவதில்லை படத்தின் மூலம் டி.ராஜேந்தரால் கதாநாயகியாக்கப்பட்ட சார்மி, சிம்புவின் ஜோடியாக முதல் படத்திலேயே லிப் டு லிப்பில் இறங்கி அதிர வைத்தார்.
இவரது திறமையைப் பார்த்த தெலுங்கு ஓல்டு நடிகர்கள் ஆந்திராவுக்கு இழுத்துச் சென்றுவிட்டனர். அங்கே வயதான நடிகர்களுடன் கவர்ச்சியின் எல்லைகளை விஸ்தரித்த சார்மி, ஆந்திராவின் முன்னணி நாயகியாகிவிட்டார்.
நீண்ட இடைவெளிக்குப்பின், லாடம் என்ற தமிழ் படத்தில் குலுங்க குலுங்க கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். இந்த படத்தைப் பார்ப்பதற்காக சென்னை வந்த சார்மி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
காதல் அழிவதில்லை படத்துக்குப்பின், எனக்கு நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வந்தன. தெலுங்கு படங்களில் பிஸியாகி விட்டதால், தமிழ் படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. லாடம் டைரக்டர் பிரபு சாலமோன் ஹைதராபாத் வந்து, இந்த படத்தில் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதால் சம்மதித்தேன்.
தெலுங்கு படங்களில் நான் மிக கவர்ச்சியாக நடிப்பதாக சொல்கிறார்கள். அதில் தப்பு என்ன இருக்கிறது? உடம்பை காட்டினால்தான் தப்பு. ரசிகர்களை மகிழ்விக்க அதிகமாக கவர்ச்சி காட்டினால் தப்பே இல்லை. ஆபாசம் தான் தப்பு என்றார்.
ஆந்திராவில், கதாநாயகிகள் மீது வெறிபிடித்த ரசிகர்கள் இருக்கிறார்கள். சில கதாநாயகிகளை ரசிகர்கள் கட்டிப்பிடித்த சம்பவங்கள் எல்லாம் அங்கே உண்டு. உங்களை யாராவது திடீர் என்று கட்டிப் பிடித்தால், என்ன செய்வீர்கள்? என்று கேட்டதற்கு,
இந்தியா ஜனநாயக நாடு என்பதற்காக, யாரும் யாரையும் தொடுவதற்கு உரிமை இல்லை. நூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்து படம் பார்ப்பவர்கள், அந்த படத்துடன் தங்களின் ஆசைகளை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் வெளியே எதிர்பார்க்க கூடாது. என் அனுமதி இல்லாமல், யாராவது என்னை தொட்டால், அவர்களை மன்னிக்க மாட்டேன் என்றார்.
உங்கள் முதல் பட நாயகன் சிலம்பரசனுடன் இன்னமும் நட்பு வைத்திருக்கிறீர்களா?
அவருடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றார் சார்மி.


Click it and Unblock the Notifications











