twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடையாளம் மறந்த பிரியாமணி!

    By Staff
    |

    Priyamani
    தமிழ்தான் தனக்கு தேசிய விருது பெற்றுத் தந்தது, அடையாளம் கொடுத்தது என்பதை மறந்து விட்டு மலையாளத்தையும், தெலுங்கையும் பாராட்டி, தாலாட்டி வருகிறாராம் பிரியாமணி.

    பெங்களூரிலிருந்து பாரதிராஜாவால் தமிழுக்குக் கொண்டு வரப்பட்டவர் பிரியாமணி. முதல் படம் போணியாகவில்லை. இதனால் ராசியில்லாத நாயகிகள் வரிசையில் சேர்க்கப்பட்டார் பிரியாமணி.

    ஆனால் அமீரின் பருத்தி வீரன் பிரியாமணிக்கு பெயர் பெற்றுத் தந்தது. கூடவே சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வாங்கிக் கொடுத்தது.

    ஆனால் அமீருக்கு ஆப்பு வைப்பது போல நடந்து கொண்டார் பிரியாமணி. அவரது அடுத்த படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை நிராகரித்தவர், பருத்தி வீரன் படத்தில் நடித்த இமேஜை மாற்றியாக வேண்டும் என்று கூறி கவர்ச்சிக் களத்தில் குதித்தார்.

    பாரதிராஜா, பாலுமகேந்திரா, அமீர் என பிரபலமான இயக்குநர்கள் படத்தில் நடித்தும் கூட பெரிய அளவில் பிரபலமாகவில்லை பிரியாமணி. ஒரு படத்தில் நடித்தால் போதாதே, தொடர்ந்து நன்றாக நடிக்க வேண்டுமே. இதனால் பிரியாமணிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை.

    ஆனால் அவரது கவர்ச்சிக்கு தெலுங்குத் திரையுலகம் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்பளித்தது. மலையாளத்திலும் ஓரளவுக்கு வாய்ப்புகள் வந்தது.

    இதனால் தமிழ்த் திரையுலகை திட்டி வருகிறாராம் பிரியாமணி. தமிழ்த் திரையுலகம் எனது திறமையைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டது. பயன்படுத்த்த தெரியவில்ல என்று கூறி வருகிறாராம். அதேசமயம், தெலுங்கும், மலையாளமும்தான் இவரை சரியாக பயன்படுத்தி வருவதாகவும் கூறுகிறாராம்.

    இப்படித்தான் பத்மப்ரியாவும் மலையாளத்தைப் புகழ்ந்து பேசி வருகிறார். இந்த வரிசையில் இப்போது பிரியாமணியும் சேர்ந்துள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X