Don't Miss!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- News தலைகீழாக திரும்புதே.. விவசாயிகளுக்கு குஷி.. இனி "ஸ்பாட் ஆக்ஷன்".. தமிழக அரசின் புது அதிரடி வருகிறது
- Technology Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அடையாளம் மறந்த பிரியாமணி!
பெங்களூரிலிருந்து பாரதிராஜாவால் தமிழுக்குக் கொண்டு வரப்பட்டவர் பிரியாமணி. முதல் படம் போணியாகவில்லை. இதனால் ராசியில்லாத நாயகிகள் வரிசையில் சேர்க்கப்பட்டார் பிரியாமணி.
ஆனால் அமீரின் பருத்தி வீரன் பிரியாமணிக்கு பெயர் பெற்றுத் தந்தது. கூடவே சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வாங்கிக் கொடுத்தது.
ஆனால் அமீருக்கு ஆப்பு வைப்பது போல நடந்து கொண்டார் பிரியாமணி. அவரது அடுத்த படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை நிராகரித்தவர், பருத்தி வீரன் படத்தில் நடித்த இமேஜை மாற்றியாக வேண்டும் என்று கூறி கவர்ச்சிக் களத்தில் குதித்தார்.
பாரதிராஜா, பாலுமகேந்திரா, அமீர் என பிரபலமான இயக்குநர்கள் படத்தில் நடித்தும் கூட பெரிய அளவில் பிரபலமாகவில்லை பிரியாமணி. ஒரு படத்தில் நடித்தால் போதாதே, தொடர்ந்து நன்றாக நடிக்க வேண்டுமே. இதனால் பிரியாமணிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை.
ஆனால் அவரது கவர்ச்சிக்கு தெலுங்குத் திரையுலகம் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்பளித்தது. மலையாளத்திலும் ஓரளவுக்கு வாய்ப்புகள் வந்தது.
இதனால் தமிழ்த் திரையுலகை திட்டி வருகிறாராம் பிரியாமணி. தமிழ்த் திரையுலகம் எனது திறமையைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டது. பயன்படுத்த்த தெரியவில்ல என்று கூறி வருகிறாராம். அதேசமயம், தெலுங்கும், மலையாளமும்தான் இவரை சரியாக பயன்படுத்தி வருவதாகவும் கூறுகிறாராம்.
இப்படித்தான் பத்மப்ரியாவும் மலையாளத்தைப் புகழ்ந்து பேசி வருகிறார். இந்த வரிசையில் இப்போது பிரியாமணியும் சேர்ந்துள்ளார்.