'பேன்டா' அம்பாசடர் ஜெனீலியா!

பேன்டா போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களை வரவழைத்து சென்னையில் சமீபத்தில் நடத்தபப்ட்ட மீட் அன்ட் க்ரீட் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார்.
இந்த கோடை காலத்தில் பேன்டாவின் புதுச் சுவை பானத்தை அறிமுகப்படுத்துகிறது கோககோலா நிறுவனம். அதன் பிராண்ட் அம்பாசடராக நியமிக்கப்பட்டுள்ளார் ஜெனீலியா.
வெற்றி பெற்றவர்களுடன் உரையாடிய ஜெனீலியா, அவர்களுக்குப் பரிசுகளையும் தனது கையாலேயே வழங்கினார்.
பேன்டாவுடன் இணைந்தது குறித்து ஜெனீ கூறுகையில், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீண்ட காலமாகவே நான் பேன்டாவின் ரசிகை. தற்போது அறிமுகமாகியுள்ள பேன்டா ஆப்பிள் பானத்தை தொடங்கி வைப்பது திரில்லாக உள்ளது.
இதன் சுவை அருமையாக உள்ளது. நிச்சயம் எனது ரசிகர்கள் இதை வாங்கி பருகி மகிழ்வார்கள் என நம்புகிறேன் என்றார்.
ஜெனீலியா கையில் இப்போது இரண்டு இந்திப் படங்களும், இரண்டு தமிழ்ப் படங்களும் இருக்கிறதாம். 'பேன்டா'ஸ்டிக்!


Click it and Unblock the Notifications











