Don't Miss!
- News உடைந்து அழுது.. நொறுங்கிய கல்பனா.. பாஜகவை தேசிய அளவில் துரத்தும் "கண்ணீர்".. நிலைமையே மாறுதே
- Finance ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ கிளைகளில் டெபாசிட் செய்ய தடை
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- Sports IPL Classics - டெல்லியை பொளந்த மும்பை அணி.. 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கதை
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
காதலருடன் மதுமிதா நிச்சயதார்த்தம்!
ஆந்திர அழகி மதுமிதா, ஆரம்பத்தில் தெலுங்குப் படங்களில் நடித்து வந்தார். பிறகு பார்த்திபன் ஜோடியாக 'குடைக்குள் மழை' படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
தொடர்ந்து அமுதே, இங்கிலீஷ்காரன், நாளை, அறை எண் 305-ல் கடவுள் படங்களில் நடித்தார். இப்போது யோகி, சொல்ல சொல்ல இனிக்கும், நல்வரவு, காதல் மெய்ப்பட... போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இவருக்கும் தெலுங்கு ஹீரோ சிவபாலாஜிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் ஹைதராபாத்திலுள்ள கோல்கொண்டா ஹோட்டலில் நடைபெற்றது.
இது ஒரு காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவபாலாஜி, தமிழில் சத்யராஜ் நடித்த 'இங்கிலீஷ்காரன்' படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடி மதுமிதா. அப்போது முதல் இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
காதல், திருமணம் மற்றும் நிச்சதார்த்தம் குறித்து, மதுமிதா கூறியதாவது:
இது காதல் திருமணம் மட்டும் அல்ல. இருவீட்டுப் பெற்றோர்களின் சம்மதத்துடன் நடக்கும் திருமணம்.
என் நீண்ட நாள் நண்பரை மணக்கிறேன். இப்போது நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. திருமண தேதி முடிவாகவில்லை. தமிழில் நான் நடிக்கும் படங்களை முடித்த பிறகு திருமணம் நடக்கும். திருமணத்துக்குப் பிறகும் நடிப்பைத் தொடருவேன்... என்றார் மதுமிதா.
வாழ்த்துக்கள்!