'பெண் குழந்தை என்பதால் என்னை தொடாத என் பாட்டி..'-ஸ்னேகா

சென்னை ரோட்டரி கிளப் நான்கு பெண் சாதனையாளர்களுக்கு, சாதனையாளர் விருதினை வழங்கி கெளரவித்தது. அவர்களில் ஒருவர் ஸ்னேகா. இந்துஸ்தான் குழுமக் கல்லூரிகளின் தலைவர் டாக்டர் எலிசபெத் வர்கீஸ், ஸ்பார்டன் பள்ளிக் குழுமத் தலைவர் அன்னா ஜேக்கப், ஹைஸ்டைல் கிரியேஷன் குழுமத் தலைவர் விஜய் ஸ்ரீகிரன் ஆகியோர் மற்ற மூவர்.
சென்னை அக்கார்ட் மெட்ரோபாலிடன் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் ஸ்னேகா பெண்கள் குறித்து உருக்கமாக பேசினார்.
அவர் கூறுகையில்,
ஒரு பெண்ணின் வளர்ச்சி என்பது மிகவும் சாதாரணமானதல்ல. நான் பிறந்தபோது, எனது பாட்டி, என்னை ஒரு மாதத்திற்கு தொடக் கூட இல்லையாம். காரணம், நான் பெண்ணாக பிறந்து விட்டேன் என்பதற்காக.
பிறகு நான் நடிக்க வந்தபோது எனது முதல் படமே மிகப் பெரிய தோல்விப்படமாக அமைந்தது. நான் பத்தாவது படத்தில் நடித்தபோதுதான் எனது 2வது படமே வெளியானது.
எனவே பெண்கள் சமூகத்தில் வளருவது என்பது சாதாரணமதல்ல, மிகக் கடினமானது. போட்டிகள், பொறாமைகள் அதிகம்.
இருப்பினும் இதுபோன்ற விருதுகள் பெண்களின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக உள்ளன என்றார் ஸ்னேகா.


Click it and Unblock the Notifications











