Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'சோக்காலி'க்காக திரும்பி வந்தார் சோனா!
சோக்காலி என்ற படத்தில் நடிப்பதற்காக மீண்டும் சென்னை திரும்பியுள்ளார் கவர்ச்சி நடிகை சோனா.
நடிகை சோனாவுக்கும், பின்னணிப் பாடகர் எஸ்.பி.சரணுக்கும் இடையே சமீபத்தில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டது. போலீஸ் வரை போனார் சோனா. சரண் தரப்பில் சமரசம் பேசியதாக தெரிகிறது. பின்னர் சோனாவிடம் சரண் தரப்பு மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து புகாரை திரும்பப் பெறுவதாக கூறினார் சோனா. மேலும் தற்காலிகமாக நடிப்புக்கு முழுக்குப் போடுவதாகவும் கூறி வெளிநாட்டுக்குப் போய் விட்டார்.
கடைசி வரை சோனா -சரண் விஷயத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பது கடைசி வரை யாருக்குமே தெரியவில்லை. இந்த நிலையில் மறுபடியும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார் சோனா. சோக்காலி என்ற படத்தில் நடிக்கிறாராம். இதில் அவருக்கு முக்கிய வேடமாம்.
இதுகுறித்து சோனா கூறுகையில், இந்த மாதம் ஷூட்டிங்கைத் தொடங்குகிறார்கள். முக்கிய வேடத்தில் நான் நடிக்கிறேன். வில்லத்தனமாகவும், நல்லதனமாகவும் இதில் நான் வித்தியாசமாக நடிக்கிறேன். இது கிட்டத்தட்ட எனது நிஜ கேரக்டர் மாதிரியே இருப்பதால் ஈடுபாட்டுடன் நடிக்கிறேன் என்றார் சோனா.
அப்புறம், படத்தில் சோனாவின் நிஜ வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமும் இடம் பெறப் போகிறதாம். அது என்ன என்று கேட்டால் சஸ்பென்ஸ் என்கிறார் சோனா.
சரி,சமீபத்திய சர்ச்சைகள் குறித்து என்ன சொல்ல வருகிறீர்கள் என்று கேட்டால், அதுகுறித்து நான் பேசவே விரும்பவில்லை. அதை மறக்கவே விரும்புகிறேன். யார் வாழ்க்கையையும் நான் கெடுக்கவில்லை என்றார் பொத்தாம் பொதுவாக.
அப்படியானால் வெங்கட்பிரபுவின் படத்தில் நடிப்பீர்களா என்று கேட்டபோது, இல்லை இல்லை, எனது முழு கவனமும் இப்போதைக்கு எனது யூனிக் ஸ்டோர் மீது மட்டுமே உள்ளது என்றார் அவசரம் அவசரமாக.
ஆமாமா, கடையையும் பார்த்துக்கணுமே வியாபாரமும் முக்கியமில்லையா... !