Don't Miss!
- News திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலுக்குள் அந்த "சத்தம்".. கருவறை கிட்ட சேர்ல யாரு? திருவள்ளூர் கொடுமை
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
காங்.குக்கு குறி வைக்கும் பாபிலோனா!
பாபிலோனாவின் பிளட்டில் அரசியல் ரத்தம் கலப்பது இது புதிதல்ல. ஏற்கனவே அவரது பெரியம்மாவான முன்னாள் கவர்ச்சி 'பிரளயம்' மாயா காங்கிரஸில்தான் இருக்கிறார் (ஆனால் யாரும் அவரை பிரசாரத்திற்கு பயன்படுத்துவதாகத் தெரியவில்லை). இந்த வரிசையில் தற்போது தனது பெரியம்மாவின் ஆசியுடன் அரசியல் களத்தில் குதிக்கப் போகிறாராம், கவர்ச்சி சினிமாவில் மூழ்கித் திளைத்த பாபிலோனா.
அடிக்கடி மாயாவும், அவரது மகன் விக்கியும் அக்கம் பக்கத்து ஆட்களிடம் சண்டை போடுவதும், கைதாவதும், போலீஸ் நிலையத்திற்கு அலைவதுமாக உள்ளனர். இவர்கள் மீது இல்லாத புகார்களே அப்பகுதியில் கிடையாது.
இந்த சர்ச்சைக்கு மத்தியில் பாபிலோனா தொடர்ந்து கவர்ச்சிகரமான படங்களில் நடித்து வருகிறார். தற்போது அரசியல் களம் புகுந்து அனல் பறப்ப தயாராகி விட்டாராம் பாபிலோனா.
ஏன் இந்த திடீர் ஆசை என்று பாபியிடம் கேட்டால், ராகுல் காந்தியின் தமிழக சுற்றுப்பயணங்களில் அவர் பேசிய பேச்சுக்கள் என்னை வெகுவாக கவர்ந்து விட்டன என்கிறார் பாபி.
தொடர்ந்து அவர் கூறுகையில், எனது பாட்டி மற்றும் பெரியம்மா நடிகை மாயா போன்றோரெல்லாம் காங்கிரஸ் கட்சியில் இருந்தனர். வளர்ந்ததும் எனக்கும் அரசியல் ஆர்வம் வந்தது. காங்கிரசில் சேரலாம் என முடிவு செய்தேன்.
என் குடும்பத்தினர் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள் என்பதால் அந்த கட்சியை தேர்வு செய்தேன்.
ராகுல் காந்திய மனதில் பட்டதை அப்படியே பேசுகிறார். அவரது பேச்சுக்களால் நான் ஈர்ப்பாகி விட்டேன். கையில் தற்போது சில படங்கள் உள்ளன. அதை முடித்து விட்டு காங்கிரஸில் சேர்ந்து விடுவேன்.
பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது நல்லது செய்ய வேண்டும். அரசியல் என்பது மக்களுக்கு சமூக பணிகள் செய்ய நல்ல களம். எனவேதான் காங்கிரஸ் கட்சிக்கு போகிறேன். சட்டசபைத் தேர்தலிலும் பிரசாரம் செய்வேன் என்று கூறி நிறுத்தினார் பாபி.
அப்பாடா, காங்கிரஸும் இனி வேகமாக வளர்ந்து விடும்!.