Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
மீராவுக்கு 'அம்மா' தடை!
நல்ல நடிகை என்ற தனது புகழுக்கு இணையாக கால்ஷீட் சொதப்பலிலும் பெயர் பெற்றவர் மீரா ஜாஸ்மின். மலையாளத்தின் அனைத்து முன்னணி நடிகர்களிடமும் மீரா ஏதாவது ஒரு வகையில் கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொண்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் திலீப்பின் கல்கத்தா நியூஸ் படத்தில் நடித்த போது தகராறு செய்தார் என இவர் மீது மலையாள நடிகர் சங்கத்தில் புகார் செய்திருந்தார் படத்தின் இயக்குநர் பிளெஸ்ஸி. இருந்தாலும் அவரது நடிப்பாற்றலுக்காக இதுவரை அனைவரும் பொறுத்துக் கொண்டனர்.
இப்போது மோகன்லாலுடன் ஜோடியாக இவர் நடித்துள்ள இன்னாதே சிந்தாவிஷயம் கேரளாவெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், மலையாள நடிகர்களின் அமைப்பான 'அம்மா' தயாரித்து வரும் மலையாளப் படமான 'ட்வென்டி: 20'-ல் நடிக்க முடியாது என மீரா தெளிவாகக் கூறிவிட்டதால், இனி அவரை வைத்துப் படங்கள் எடுக்கக்கூடாது என அனைத்து மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் 'அம்மா' நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மலையாளத்தில் அசைக்க முடியாத நம்பர் ஒன் நாயகியாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் மீராவுக்கு இதனால் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. தற்போது 4 மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் மீரா என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மீராஜாஸ்மினுடன் பேசினோம். அவர் கூறியதாவது:
அம்மாவின் படத்தில் நடிக்கக் கூடாது என்று எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. ஆரம்பத்தில் இப்படத்துக்காக நான் கொடுத்த தேதிகளை வீணடித்துவிட்டார்கள். இப்போது தெலுங்கு மற்றும் தமிழ்ப் படங்களுக்காக தேதி கொடுத்துள்ளேன். மேலும் சில மலையாளப் படங்களுக்கும் ஏற்கெனவே தேதிகளை ஒதுக்கிக் கொடுத்துவிட்டேன்.
இதுகுறித்து நான் தெளிவாக விளக்கிக் கூறிய பின்னும் தடை அறிவித்திருப்பது அதிர்ச்சி தருகிறது. இப்போதும் என் நிலையைப் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். ஒரு நடிகையாக எனக்கு அனைத்து மொழிப் படங்களும் ஒன்றுதான்.... தேதிகள் ஒத்து வந்தால் அம்மா படத்திலும் நடிப்பேன்... என்றார் மீரா.
சேட்டன்மாரே, தாய்மாரை அழ வைக்காதீங்கோ!