Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கற்பு குறித்த நீதிபதிகளின் கருத்து - சுப்ரீம் கோர்ட்டில் 5 மணி நேரம் அமர்ந்து கேட்ட குஷ்பு
தன் மீது தமிழக கோர்ட்களில் தொடரப்பட்ட 22 கிரிமினல் வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரி குஷ்பு தொடர்ந்த சிறப்பு விடுப்பு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் பரபரப்பு கருத்துக்களை வெளியிட்டது.
இந்த விசாரணையையும், வக்கீல் விவாதத்தையும் நேரில் காண குஷ்பு கோர்ட்டுக்கு வந்து இருந்தார். சல்வார் கமீஸ், துப்பட்டா அணிந்து சிம்பிளாக வந்திருந்தார்.
கோர்ட்டில் முன் இருக்கையில் உட்காருவதற்கு அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. வழக்கமாக இங்கு மனுதாரர்கள் அமர வைக்கப்பட மாட்டார்கள். பாதுகாப்பு காரணமாக இங்கு யாரையும் அமர வைக்க மாட்டார்கள். ஆனால் குஷ்புவுக்கு மட்டும் சிறப்பு அனுமதி தரப்பட்டிருந்தது.
அங்கு கிட்டத்தட்ட 5 மணி நேரம் உட்கார்ந்து விவாதத்தை கேட்டார். அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு கருத்து தெரிவித்தபோது அவரது முகத்தில் மகிழ்ச்சி பூத்ததாம்.
நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்களை மிகவும் கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாராம் குஷ்பு.